சித்து அனுபவிக்காத சித்திரவதையே இல்லை – உண்மையை உடைத்த ஹேமந்த் நண்பர்!

Published by
Rebekal

சித்ரா உயிருடன் இருக்கும் போது அனுபவிக்காத சித்திரவதையே இல்லை எனவும், சித்ராவின் மரணத்திற்கு முழுக்க முழுக்க ஹேமந்த தான் காரணம் எனவும் அவரது நண்பர் ரோஹித் கூறியுள்ளார்.

பிரபல தொகுப்பாளினியும் சீரியல் நடிகையுமாகிய சித்ரா அவர்கள் தற்கொலை செய்து உயிர் இழந்த சம்பவம் தற்போது வரையிலும் பலரது மனதையும் விட்டு  நீங்காத முடியாத ஒன்றாகவும் சந்தேகத்துக்குரிய ஒரு மர்மமான மரணமாகவுமே இருந்து வருகிறது. இந்நிலையில், அவரது காதலரை நிச்சயம் செய்து திருமணம் நடக்கவிருந்த நிலையில் நடைபெற்றுள்ள இந்த தற்கொலையின் போது அவரது காதலன் தான் உடன் இருந்தார் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றாக உள்ளது. அவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது பல வதந்திகள் சித்ரா குறித்தும் ஹேமந்த் குறித்தும் கூறப்பட்டு வந்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஹேமந்த் நண்பர் ரோஹித் சர்மா என்பவர் தற்பொழுது இதுகுறித்த உண்மைகளை உடைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், சித்ரா உயிருடன் இருக்கும் பொழுது அனுபவிக்காத சித்திரவதையை இல்லை எனவும், ஹேமந்த் ஒரு மனித தனமாக சித்ராவிடம் நடந்து கொள்ளவில்லை எனவும் ஆதாரமான சில தகவல்களை தெரிவித்துள்ளார். சித்ரா காதலிக்கத் தொடங்கும் பொழுது ஹேமந்த் குறித்து அவ்வளவாக தெரியாவிட்டாலும், அதன் பின்பு சித்ராவிற்கு ஹேமந்த்தின் உண்மை முகம் மற்றும் அவனது கொடூரமான குணத்தை தெரிந்து கொண்டார். ஆனாலும் காதலித்து விட்டோமே என்ற ஒரு காரணத்திற்காக கண்டுகொள்ளாமல் இருந்து வந்தார். ஒவ்வொரு நாளும் சித்ரா சித்திரவதையை அனுபவித்து வந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் இனி நடிக்கக் கூடாது எனவும் சித்ராவை மிரட்டினான். ஆனால் இப்பொழுது தான் நான் தொடங்கி இருக்கிறேன் திடீரென்று நிறுத்தி விட்டால் நன்றாக இருக்காது என சித்ரா கூறினார். இருப்பினும் அவன் கேட்கவில்லை.

ஒருமுறை நாங்கள் வெளியில் சென்று இருக்கும்பொழுது அவ்வளவு மக்கள் முன்பதாக கூட சித்ராவுக்கு யாரோ போன் செய்தார்கள் எனும் காரணத்திற்காக ஹோட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்த தட்டை சித்ரா மீது தூக்கி வீசினார். ஹோட்டலில் இருந்த அனைவரும் முன்பும் சித்ரா அழுது கொண்டுதான் நின்றார். அதன் பின்பு நான் சித்ராவைப் பார்க்கவே இல்லை, கடைசியாக சித்ரா இறந்து விட்டார் என்ற செய்திதான் எனக்கு கிடைத்தது. ஆனால் அதற்கு முன்பதாக ஹேமந்த் சித்ராவை அடிப்பது எல்லாம் நான் பார்த்திருக்கிறேன். ஒரு மனிதனை அடிப்பது போன்று அவன் நடந்து கொள்ளவே மாட்டான்.

நகங்களை வைத்து முகத்தில் கைகளில் கிள்ளுவது போன்ற செயல்களை தான் செய்வான், பலமுறை நானும் அவள் ஒரு சீரியல் நடிகை முகத்தை தொலைக்காட்சி முன்பதாக காட்ட வேண்டும். இவ்வாறு செய்யாதே என்று சொன்னாலும் அவன் அடுத்த நாளே கூட மறுபடியும் சண்டையிடுவதற்கு தயாராக இருப்பான். அவனது முன்னாள் வாழ்க்கையில் பல பெண்களை ஏமாற்றி இருந்தான் ஆனால் திருமணம் செய்து கொண்டானா என்பது எனக்கு தெரியாது. உண்மைகள் தெரிந்தும் சித்ரா காதலித்து விட்டோமே என்ற காரணத்திற்காக பொறுத்து வந்தார் கடைசியில் சித்ராவின் நிலை இப்படி ஆகிவிட்டது என மிக வருத்தத்துடன் கூறுகிறார்.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

12 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

14 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

14 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago