பூமிகா படத்தை பார்ப்பவர்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு செடியாவது வளர்க்க வேண்டும் என ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இவரது நடிப்பில் திட்டம் இரண்டு சோனிலிவ் ஓடிடியில் வெளியாகி பரவலான வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் ரதீந்திரன் பிரசாத் இயக்கத்தில் பூமிகா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் தயாராகியுள்ள ஓணத்தை முன்னிட்டு நாளை விஜய் தொலைக்காட்சியில் வெளியாகிறது. இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு குழந்தைக்கு தயாக நடித்துள்ளார்.
இந்த நிலையில், படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் பேசியது ” இப்படத்தில் நடித்தது மிகவும் சந்தோசம். நான் இது போன்ற வேடங்களில் மட்டுமே இப்போது நடித்து வருகிறேன். படத்தில் தாயக நடித்தது மகிழ்ச்சி. தாயாக நடிப்பதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. எனக்கு கதை தான் முக்கியம். பூமிகா படத்தை பார்ப்பவர்கள் உங்கள் வாழ்க்கையில் ஒரு செடியாவது வளர்க்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
பெங்களூர் : புள்ளி விவரப்பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கும் டெல்லி அணியும், 3-வது இடத்தில் இருக்கும் பெங்களூர் அணியும் இன்று…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் தற்போதைய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், காயம் காரணமாக ஐபிஎல் 2025…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எந்த அளவுக்கு மோசமாக விளையாடமுடியுமோ அந்த அளவுக்கு இந்த சீசனில் விளையாடி வருவதாக…
சென்னை : தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டு காலமே உள்ளதால் தற்போதே அரசியல் தேர்தல் களம் பரபரக்க…
சென்னை : கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், கடந்த ஏப்ரல் 5-ம் தேதி பூப்பெய்திய…
சென்னை : இன்னும் ஓராண்டில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவியில்…