கொரோனா தடுப்பூசிகள் வைத்திருப்பதில் உலக நாடுகளிடையே பாகுபாடு நிலவுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து வல்லரசு நாடுகளான அமெரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி,இஸ்ரேல்,பிரிட்டன் மற்றும் கனடா போன்ற நாடுகள் கொரோனா தடுப்பு மருந்துகளை அதிக அளவில் வாங்கி வைத்துக் கொள்கின்றன.இதனால் ஆசியா,ஆப்பிரிக்கா கண்டங்களில் உள்ள ஏழை மற்றும் வளரும் நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகள் சென்றடையாமல் இருக்கின்றன.
இந்த நிலையில்,கொரோனா தடுப்பூசிகள் விநியோகம் செய்வதில் பாகுபாடு நிலவுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா துன்பெர்க் தெரிவித்துள்ளார்.
மேலும்,இதனைப் பற்றி கிரேட்டா கூறுகையில்,”கொரோனா தடுப்பூசி பாகுபாட்டைக் குறைக்க சர்வதேச நாடுகளின் பங்களிப்பு தேவை.காலநிலை நெருக்கடிகளைக் உலக நாடுகள் சேர்ந்து கையாள்வதைப் போல,தற்போது முதலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கே உதவ வேண்டும்.
அதுமட்டுமல்லாமல்,கொரோனா தடுப்பூசிகளைப் பெறுவதில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.ஏனெனில்,பணக்கார நாடுகள் அதிகமான தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்துள்ளன.ஆனால்,ஏழை நாடுகளிடம் தடுப்பூசிகள் போதுமான அளவு இல்லை.
மேலும்,48% கொரோனா தடுப்பூசிகள் பொருளாதாரத்தில் வளர்ந்த நாடுகளுக்கு வழக்கப்பட்டுள்ளன.ஆனால்,ஏழை நாடுகளுக்கு 0.1 % மட்டுமே தடுப்பூசிகள் வழக்கப்பட்டுள்ளன” என்று கூறியுள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…