ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அகதிகளுக்கு உலக நாடுகள் அடைக்கலம் தர வேண்டும் என மலாலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் நாட்டில் தற்பொழுது தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், அந்நாட்டில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பல்வேறு உலக நாடுகளும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் துணிச்சலுடன் முன்வந்து ஆப்கான் மக்களை பாதுகாக்க வேண்டும் என அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், இது குறித்து தெரிவித்துள்ள அவர் ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து வெளியேறிய அகதிகள் அனைவருக்கும் அடைக்கலம் தர உலக நாடுகள் முன் வர வேண்டும் எனவும் கூறியுள்ளார். மேலும் நெருக்கடியான காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் குறித்து மிகுந்த கவலை அடைவதாகவும், ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் மக்களை பாகிஸ்தான் அனுமதிக்குமாறு அதிபர் இம்ரான் கானுக்கு தான் கடிதம் அனுப்பி இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…
சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது தமிழக…
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…