பயங்கரவாதிகளை ஆதரிப்பதே பாகிஸ்தான் தான் – இந்தியா!

Published by
Rebekal

பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஆதரித்து, அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததை உலக நாடுகள் வெளிப்படையாக அறியும் என ஐநா சபையில் இந்தியா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐநா பொதுச்சபைக் 76 ஆவது கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது குறித்தும், பிரிவினைவாத தலைவர் சையத் அலி ஷா கிலானி குறித்தும் பேசியுள்ளார்.

இதற்கு பதிலளித்த இந்திய முதன்மை செயலாளர் சினேகா தூபே அவர்கள், பாகிஸ்தான் பிரதமர் உலக அரங்கில் பொய்யான விஷயங்களை தூண்ட முயற்சிக்கிறார். ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்கள் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் எப்போதும் பிரிக்க முடியாத பகுதிகளாக இருக்கும் எனவும், பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ள அனைத்து பகுதிகளையும் உடனடியாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நீண்ட காலமாகவே பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளித்து, இந்தியா மீது தாக்குதல் நடத்தும் செயலில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாகவும், பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பதும், அவர்களுக்கு நிதியுதவி அளிப்பதும் தான் பாகிஸ்தான் அரசின் கொள்கையாக இருப்பதை உலக நாடுகள் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும், அண்டை நாடுகளுக்கு மட்டும் தீங்கு விளைவிக்கும் என்ற நம்பிக்கையில் பயங்கரவாதிகளை அவர்களின் கொல்லைப்புறத்தில் பாகிஸ்தான் வளர்ப்பதோடு, இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளும் பாகிஸ்தான் அரசின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

4 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

16 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

21 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

21 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

21 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

22 hours ago