மாஸ்க் போல முகத்தில் பெயிண்ட் அடித்துக்கொண்டு கடைக்குள் நுழைந்த பெண்மணி – வைரல் வீடியோ உள்ளே!

Default Image

முகத்தில் மாஸ்க் அணியாமல் அதற்க்கு பதிலாக மாஸ்க் பெயின்ட் போல அடித்துக்கொண்டு சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து செல்லும் பெண்ணின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இந்த கொரோனாவை எதிர்ப்பதற்கு நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. முக்கியமாக முகக்கவசம் அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதே போல தான் மற்ற நாடுகளிலும் முக கவசம் அணிவது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தோனேசியாவில் உள்ள பெண்மணி ஒருவர் கொரோனாவில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள மாஸ்க் அணிய வேண்டும் என தெரிந்து இருந்தாலும், தனது கணவரின் உதவியுடன் முகத்தில் நீல நிறத்தில்  மாஸ்க் போல பெயிண்ட் அடித்துக் கொண்டு சூப்பர் மார்க்கெட்டுக்குள் சென்றுள்ளார். இது குறித்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இவர்களது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதுடன், இவர்கள் நாடு கடத்த படுவார்கள் எனவும் கூறப்படுகிறது. இதோ அந்த வீடியோ,

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்