விமானத்தில் மாஸ்க் அணியாமல் சாப்பிட்ட முதியவரை தாக்கிய பெண்.
கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடுகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், மக்கள் அனைவரும் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த ஒரு பெண் தனது பக்கத்தில் அமர்ந்திருந்த முதியவர் மாஸ்க் அணியாமல் இருந்ததால் அவரை தாக்கியுள்ளார். அந்த முதியவர் பயணத்தின் போது மாஸ்க் அணிந்து இருந்த நிலையில், சாப்பிடுவதற்காக கழட்டியுள்ளார். அப்போதுதான் அப்பெண் அவரை தாக்கியுள்ளார்.
இதனை அந்த விமானத்தில் பயணித்த சக பயணிகள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர். இந்த பெண்ணின் தாக்குதலையடுத்து விமானம் தரையிறங்கியதும் அப்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…