மீண்டும் இத்தாலியில் நடைமுறைக்கு வரும் ‘wine window’ பழக்கம்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்த இக்கட்டான கால கட்டத்தில் மக்கள் கண்டிப்பாக சில வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இத்தாலியில் உள்ள உணவகம் மற்றும் பார்களில் சமூக இடைவெளியை கடைபிடிப்பதற்கு பழங்கால முறைகளில் ஒன்றான, ‘Wine Window’ பழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. உணவகங்களின் கான்கிரீட் சுவர்களில், ஜன்னல் போன்ற அமைப்பு ஒன்று இருக்கும். அதில் வாடிக்கையாளர்களுக்கு தேவையான உணவுகள் மற்றும் ஒயின்களை வழங்குவார்கள். இதன் மூலம் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மட்டுமல்லாமல், விற்பனையும் எப்போதும் போல் நடைபெறும்.
பல ஆண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் புபோனிக் பிளேக் நோய் பரவத் தொடங்கிய போது, இதுபோன்ற ஜன்னல் மூலம் விற்பனை செய்யும் முறையை அக்கால மக்கள் அறிமுகப்படுத்தினர். அந்த வகையில், தற்போது இத்தாலியில் ஒயின் ஜன்னல்கள் மீண்டும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் பொருளாதாரத்திற்கும் எந்த பிரச்சனையும் இருக்காது என்றும், மக்களுக்கும் பாதுகாப்பான உணர்வு இருக்கும் என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…