ஒட்டகச்சிவிங்கியை கொன்று, அதன் இதயத்தை கணவனுக்கு காதலர் தின பரிசாக கொடுத்த மனைவி!

Published by
Rebekal

தென்னாப்பிரிக்காவில் உள்ள பெண்மணி ஒருவர் வயதான ஒட்டகச்சிவிங்கி ஒன்றை கொன்று அதன் இதயத்தை தனது கணவருக்கு காதலர் தின பரிசாக கொடுத்து உள்ளதுடன், தனது ஐந்து ஆண்டுகள் நிறைவேறியதாக பெருமையுடன் இணையதள பக்கத்தில் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் வசிக்க கூடிய மெரலைஸ் வான் டெர் மெர்வே எனும் பெண்மணி தனது ஐந்து வயது முதலே வேட்டையாடுவதில் அதிக பிரியம் கொண்டவராம். தற்போது 32 வயது ஆகிறது, இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் வடக்கு லிம்போபா மாகாணத்தில் உள்ள சிட்ரஸ் எனும் பண்ணையை நடத்தி வரக்கூடிய இந்தப் பெண்மணி சிங்கம், சிறுத்தை, யானை என 500க்கும் மேற்பட்ட விலங்குகளை இதுவரை வேட்டையாடி உள்ளாராம். இந்நிலையில் கடந்த 5 வருடங்களாக இவருக்கு ஒரு ஆண் ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாட வேண்டும் என்ற எண்ணம் இருந்ததாம். அந்த கனவு தற்பொழுத நினைவாக உள்ளதாக தனது இணையதள பக்கத்தில் அவர் வேட்டையாடிய ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை கையில் வைத்துள்ளபடி புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

giraffe

இவரது இந்த செயல் அவருக்குப் பெருமையாக இருந்தாலும் விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் மிகப் பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆம், வயதான ஒட்டகசிவிங்களி ஒன்றை இவர் வேடடையாடியுள்ளார். அவர் வேட்டையாடிய இந்த ஒட்டகச்சிவிங்கியின் இதயத்தை அவரது கணவருக்கு காதலர் தின பரிசாக கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ஒட்டகச்சிவிங்கியின் தோல் அந்தப் பெண்மணிக்கு மிகவும் பிடிக்குமாம். இது குறித்து தெரிவித்துள்ள ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடிய பெண்மணி மெரலைஸ் வான் டெர் மெர்வே, இது தனது ஐந்து ஆண்டு கனவு என கூறியுள்ளார்.

மேலும், ஆப்பிரிக்காவின் சின்னமான ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடுவதற்காக பல ஆண்டுகள் காத்து இருந்ததாகவும், தற்போது தனது கனவு நினைவாக உள்ளதால் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் கூறியுள்ளார். அவர் ஒட்டகச்சிவிங்கியின் இதயம் எவ்வளவு பெரியது என்று எப்போதாவது நீங்கள் யோசித்து இருக்கிறீர்களா? எனவும் தனது பதிவில் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தான் கொன்ற ஒட்டகச்சிவிங்கியின் தோலை ஒரு கம்பளமாக பயன்படுத்தப் போவதாகவும் தனக்கு மற்றும் தனது உள்ளூர்வாசிகளுக்கு இன்று நிறைய இறைச்சி கிடைக்க உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…

1 hour ago

INDvENG : கில்லியாக கலக்கிய கில்.. 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…

2 hours ago

எல்லாத்துக்கும் காரணமே அஜித் சார் தான்! விடாமுயற்சி குறித்து உண்மைகளை உடைத்த இயக்குநர்!

சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…

3 hours ago

ஐயோ மீண்டும் மீண்டுமா! சொதப்பிய ரோஹித்…வேதனையில் ரசிகர்கள்!

மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…

4 hours ago

“இதுக்கா என் படத்தை வேணாம்னு சொன்னீங்க”…வைரலாகும் விடாமுயற்சி மீம்ஸ்கள்!

அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…

4 hours ago

படித்துவிட்டு போராட்டம் பண்ணுங்க..ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அட்வைஸ்!

டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…

5 hours ago