வெற்றி பெறும் வரை போர் தொடரும் – இஸ்ரேல் பிரதமர்..!

Published by
murugan

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கி இரண்டரை மாதங்களுக்கு மேலாகியும், இஸ்ரேல் பிணைக்கைதிகள் அனைவரும் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இஸ்ரேல் பிரதமருக்கு அவரது சொந்த நாட்டிலும் எதிர்ப்பு அதிகரித்து வருவதற்கு இதுவே காரணம். சமீபத்தில் வடக்கு காசாவுக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பயணம் மேற்கொண்டார். அவருடன் ராணுவ தலைமை தளபதிகளும் சென்றனர். காசாவில்  ராணுவ வீரர்களை இஸ்ரேல் பிரதமர் சந்தித்து பேசினார்.

காசாவில் இருந்து திரும்பிய இஸ்ரேல் பிரதமர் நேற்று  பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.  அப்போது, “காஸா பகுதியில் ஹமாஸால் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ள பொதுமக்களை மீட்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், பிணைக்கைதிகளை மீட்பதற்கு அதிக நேரம் எடுக்கும் என்று இஸ்ரேல் வெற்றி பெறும் வரை எங்களது நடவடிக்கை தொடரும்” என்று கூறினார். இதனால், அவரின் பேச்சு பிணைக்கைதிகளின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தங்களது உறவினர்கள் பிணைக்கைதிகளாக 80 நாட்களுக்கு மேலாக உள்ளனர். ஒவ்வொரு நிமிடமும் நரகமாகி வருகிறது. தங்களது குடும்ப உறுப்பினர்களை உடனடியாக மீட்க வேண்டும் என பிணைக்கைதி உறவினர்கள் வலியுறுத்தினர். மேலும், பிணைக்கைதிகளின் உறவினர்கள் கைகளில் பதாகைகள் வைத்திருந்தனர். அதில் பிணைக்கைதிகளின் புகைப்படங்கள் மற்றும் பெயர்கள் எழுதப்பட்டு இருந்தது. ஹமாஸின் சிறைப்பிடிப்பில் 129 இஸ்ரேலிய பிணைக்கைதிகள் இருந்ததாகவும் அதில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல்கள் காசாவில் உள்ளதாகவும் 107 பேர் இன்னும் ஹமாஸின் சிறைப்பிடிப்பில் உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையில், அக்டோபர் 7 முதல் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரேல் நாட்டு குடிமக்களை விடுவிக்க பேச்சுவார்த்தை நடத்துமாறு சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினிடம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வேண்டுகோள் விடுத்துள்ளார். காஸாவில் உள்ள அகதிகள் முகாம் மீதான தாக்குதலுக்கு உலக சுகாதார அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. 

இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் காசா நகரின் பொதுமக்கள் , ஹமாஸ் அமைப்பினர் என 20,057 பேர் உயிரிழந்தனர் என்றும் 53,320 பேர் போரில் காயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

வசூல் வேட்டையில் ‘GOAT’ ! 13 நாட்களில் இத்தனை கோடியா?

சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…

12 hours ago

ஜானி மாஸ்டர் மீது பாய்ந்தது போக்சோ வழக்கு.! விரைவில் கைது?

ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…

13 hours ago

அனல் பறக்கும் பிரியங்கா பிரச்சனை…மணிமேகலை போட்ட கெத்து பதிவு?

சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே  நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…

13 hours ago

தனுஷ் விவகாரம்: ஃபெப்சி செயலுக்கு நடிகர் சங்கம் அழுத்தமான கண்டனம்.!

சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…

13 hours ago

‘பத்து நிமிஷத்துல பஞ்சு போன்ற அப்பம்’: ட்ரை பண்ணி பாருங்க!

சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…

14 hours ago

ஐபிஎல் 2025 : “பஞ்சாப் அணிக்கு அடித்த ஜாக்பாட்”! பயிற்சியாளராக இணைந்தார் ரிக்கி பாண்டிங்!

சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…

14 hours ago