குட்நியூஸ்…கோவிஷீல்டுக்கு அங்கீகாரம் அளித்த இங்கிலாந்து அரசு…!

Published by
Edison

இங்கிலாந்து அரசாங்கம் கோவிஷீல்டை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவித்துள்ளது.

கொரோனா காரணமாக இங்கிலாந்தில் தற்போது ‘சிவப்பு’, ‘அம்பர்’ மற்றும் ‘பச்சை’ பட்டியலில் நாடுகளைக் குறிக்கும் ஒரு அமைப்பு உள்ளது.அவை ‘அம்பர் பட்டியலில்’ இந்தியாவை வைத்துள்ளது.

இதனால்,இங்கிலாந்திற்கு வருவதற்கு 10 நாட்களுக்கு முன்பு ஒரு நபர் ‘அம்பர் பட்டியல்’ நாட்டில் இருந்திருந்தால், அவர் இங்கிலாந்துக்குச் செல்வதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கொரோனா வைரஸ் சோதனை எடுக்க வேண்டும்.மேலும்,ஒரு பயணி எதிர்மறை கொரோனா பரிசோதனை சான்று இல்லாமல் வந்தால்,அவருக்கு 500 பவுண்டு(இந்திய மதிப்பில் ரூ.50,401.70) அபராதம் மற்றும் இங்கிலாந்துக்கு வந்த பிறகு, பயணி 2 வது நாளில் கொரோனா சோதனை எடுக்க வேண்டும் என்பது கட்டாயம்.

குறிப்பாக,இந்தியர்கள் கோவிஷீல்டின் இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருந்தாலும்,இங்கிலாந்துக்கு வருகை தந்த பிறகு தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று நிபந்தனை இருந்தது.

இந்நிலையில்,புனேவைச் சேர்ந்த சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவால் கோவிஷீல்டுக்கு இங்கிலாந்து தகுதி பெற்றுள்ளதால் இப்போது இந்தியாவிலிருந்து செல்லும் பயணிகள் மகிழ்ச்சியடையலாம். சமீபத்திய முன்னேற்றங்களின்படி, இங்கிலாந்து அரசாங்கம் தனது பயண ஆலோசனையை திருத்தியுள்ளது மற்றும் கோவிஷீல்டை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியாக அறிவித்துள்ளது.

குறிப்பாக,புதுப்பிக்கப்பட்ட இங்கிலாந்து வழிகாட்டுதல்களின்படி, “அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட், அஸ்ட்ராஜெனேகா வக்ஸெவ்ரியா மற்றும் மாடர்ன் டகேடா போன்ற நான்கு பட்டியலிடப்பட்ட தடுப்பூசிகளின் உருவாக்கம் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளாக தகுதி பெறுகிறது. அதன்படி,இங்கிலாந்திற்கு வருவதற்கு குறைந்தது 14 நாட்களுக்கு முன்பே அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியின் முழுமையான அளவை பெற்றிருக்க வேண்டும்.எனினும், தடுப்பூசி சான்றிதழ் தொடர்பாக இன்னும் சிக்கல்கள் உள்ளன என்று இங்கிலாந்து அரசாங்கம் மேலும் தெளிவுபடுத்தியது.

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

திருப்பதி லட்டு விவகாரம் : “இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?” இயக்குநர் மோகன்ஜி காட்டம்!

சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…

2 hours ago

இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை.. சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…

2 hours ago

“சுயமரியாதை முக்கியம்…கடவுளுக்கு மட்டும் தலைவணங்குங்கள்”…மணிமேகலை அட்வைஸ்!

சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…

2 hours ago

இன்னும் 10 நாளில் உதயநிதி துணை முதல்வர்.! அமைச்சர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…

2 hours ago

அக்டோபர் 27இல் த.வெ.க மாநாடு.! விஜய் அறிவிப்பு.!

சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…

2 hours ago

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

18 hours ago