வாடிகனில், ஆயிரக்கணக்கான மக்களிடையே உரையாற்றிய போப் பிரான்சிஸ், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உலக மோதலுக்கு வழிவகுத்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த போரால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், லட்சக்கணக்கான மக்கள் பிற நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
இந்த நிலையில், உக்ரைன் – ரஷ்யா இடையே இதுவரை பெலாரசில் மூன்று கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு ஏதும் எட்டப்படாததால், துருக்கியில் உக்ரைன், ரஷ்யா இடையேயான அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று தொடங்குகிறது. இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
இந்த நிலையில், வாடிகனில், ஆயிரக்கணக்கான மக்களிடையே உரையாற்றிய போப் பிரான்சிஸ், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு, உலக மோதலுக்கு வழிவகுத்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளார். மேலும், மனித குலத்தை போர் அழிப்பதற்கு முன்பாக, போரை மனித குலம் ஒழிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை அனைவரும் உணர வேண்டும். உக்ரைன் மீது ஒரு மாதத்திற்கு மேலாக ரஷ்யா போர் நடத்துகிறது. இந்த போரால், இழப்பு என்பது நம் அனைவருக்கும் தான் என தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகராக கலக்கி கொண்டு இருந்த தனுஷ் இப்போது இயக்குநராக கலக்கி கொண்டு இருக்கிறார். அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளியான…
உத்தரப் பிரதேசம் : இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி சென்ற கார் மேற்குவங்கத்தின்…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.21) கிராமுக்கு ரூ.45 குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.1,440…
சென்னை : இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு (FICCI) ஏற்பாட்டில், 'FICCI மீடியா & என்டர்டெயின்மென்ட் பிசினஸ்…
சென்னை : நேற்று திமுக டிவிட்டரில் #GetOutModi என்கிற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டிருந்த நிலையில், நாளை நான் காலை…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற நிலையில், இந்தியா, வங்கதேசம்…