3,000 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்திரேலியாவின் வனப்பகுதிக்குள் மீண்டும் வந்த டாஸ்மேனியன் டெவில்.
டாஸ்மேனியன் டெவில் என்பது பாலூட்டிகளில் வயிற்றில் பையில் உள்ள மாமிச உண்ணி இனத்தை சேர்ந்தது இ.து ஆஸ்திரேலியாவின் டாஸ்மேனியா பகுதியில் மட்டுமே காணப்பட்டதால் இதற்கு டாஸ்மேனியன் டெவில் என்று பெயரிட்டுள்ளனர். இந்த விலங்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அதிக எண்ணிக்கையில் இருந்தது.
ஆனால் ஆஸ்திரேலியாவில் படிப்படியாக இதன் எண்ணிக்கை குறைந்து, ஒன்றரை லட்சம் அளவுக்கு வந்துவிட்டது. மேலும் 1990 ஆம் ஆண்டுகளில் அரிய வகை புற்றுநோய்க் இந்த விலங்குகளை தாக்கியதால், இந்த விலங்குகளின் இனம் அழிவின் விளிம்புக்கு சென்றது. இந்நிலையில் இந்த விலங்குகளை பாதுகாக்கவும் இதனை அதிகரிக்கவும் ‘ஆஸி ஆர்க்’ என்ற அமைப்பு திட்டத்தை கையில் எடுத்தது.
அதன்படி இந்த அமைப்பு மற்ற வன விலங்கு பாதுகாப்பு அமைப்புகள் உடன் இணைந்து டாஸ்மேனியன் டெவில் விலங்கு இனப்பெருக்கம் செய்து வந்தது. இவர்களின் முயற்சியால், 26 டாஸ்மேனியன் டெவில் ஆஸ்திரேலிய தேசிய பூங்காவில் அவிழ்த்து விடப் பட்டுள்ளது .
இந்த விலங்குகள் ஆஸ்திரேலியாவின் பேரிங்டன் டாப் பகுதியில் 400 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சரணாலயத்தில் விடப்பட்டுள்ளது.
டாஸ்மேனியன் டெவிலை பொறுத்தவரையில், 8 கிலோ வரை எடை கொண்டதாக காணப்படும். இது மனிதர்களுக்கு ஆபத்தானது அல்ல என்றும், தற்போது 25,000 டெவில் விலங்குகள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை : குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நேற்று நீலகிரி, ஈரோடு,…
வாஷிங்டன் : கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் விண்கலம் மூலம்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. 9 பெட்டிகளில் சுமார்…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…