9 மாத கர்ப்பிணியின் ஆசையை நிறைவேற்றிய சூப்பர் ஸ்டார் .!

- “தர்பார்” படத்தின் கடைசி ஷூட்டிங் கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
- ரஜினி மக்கள் மன்றத்தின் துணை செயலாளர் மனைவியின் ஆசைப்படி ரஜினிகாந்த் வளைய காப்பு வளையல் வாங்கி அணிவித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “தர்பார்” படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்ட பணிகள் தற்போது நடந்து வருகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் கடைசி ஷூட்டிங் கடந்த சனிக்கிழமை சென்னையில் நடைபெற்றது.
அப்போது படப்பிடிப்பு தளத்திற்கு தென் சென்னை ரஜினி மக்கள் மன்றத்தின் துணை செயலாளர் ராகவா விக்னேஷ் தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியுடன் சென்று உள்ளார் . அப்போது ரஜினிகாந்த்தை சந்தித்த ராகவா விக்னேஷ் மனைவி ஜெகதீஸ்வரி தனது தந்தை ஸ்தானத்தில் இருந்து வளையல் அணிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு உள்ளார்.
உடனே ரஜினிகாந்த் வளைய காப்பு வளையல் வாங்கி ஜெகதீஸ்வரிக்கு அணிவித்து உள்ளார்.இந்த சம்பவம் அங்கு இருந்த ரசிகர்கள் உட்பட படக்குழுவினர் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்பத்தியது.