கொரோனா நோயாளிகளின் நுரையீரலை குறிவைக்கும் உயிரணு பாதிப்பு.! ஆய்வில் புதிய தகவல்…

Published by
மணிகண்டன்

சென்னை: கொரோனா வைரஸ் நோயாளிகளின் நுரையீரலை பாதிக்கிறது என ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

2020ஆம் ஆண்டு முதல் உலகபெருந்தொற்று நோயாக உருமாறி பல்வேறு பரிமாணங்களில் பரவி வருகிறது கொரோனா தொற்று. இந்த கொரோனா தொற்றை தடுக்க ஆராய்ச்சியாளர்கள் பல்வேறு கட்ட ஆராய்ச்சி சோதனைகளுக்கு பிறகு தடுப்பூசிகளை கண்டறிந்து கொரோனா தொற்றில் இருந்து பாதுகாத்தனர். இருந்தும் தற்போது கூட புதியவகை கொரோனா வைரஸான KP.2 எனும் தொற்று கண்டறியப்பட்டு சிங்கப்பூரில் வேகமாக பரவி வரும் நிலை உருவாகியுள்ளது. இது மேலும் சில நாடுகளுக்கும் பரவி உள்ளது.

அமெரிக்கா, கொலம்பியாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரஸ் பரவல், அதன் பாதிப்பு மற்றும் சிகிச்சை வழிமுறைகள் என புதிய ஆய்வை மேற்கொண்டு அதனை வெளியிட்டுள்ளனர். அதில், கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்படும் உயிரணு சிதைவு/மரண பாதிப்பால் நோயாளியின் நுரையீரல் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்றும், இதனால், கடுமையான சுவாசக் கோளாறுகள் போன்ற உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, நுரையீரல் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையை கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் என பரிந்துரைத்துள்ளனர்.  உயிரணு சிதைவு எனப்து செல் மரணமாகும். அது ஒரு செல்லின் செயல்பட்டை முற்றிலும் நிறுத்தும் செயல். இயற்கையாகவோ, நோய் அல்லது காயம் போன்ற காரணங்களால் கூட ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரணு சிதைவு என்பது, செல்லின் மூலக்கூறுகளுக்கு இடையே உள்ள இணைப்பை துண்டிப்பது. என்றும், இது மனிதர்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போதோ அல்லது வயதாகும்போதோ நிகழ்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஆய்வில், ஆராய்ச்சியாளர்கள் மனித திசுக்களை பகுப்பாய்வு செய்தனர். கோவிட்-19 தொற்று காரணமாக சுவாச செயலிழப்பால் இறந்த நோயாளிகளின் பிரேத பரிசோதனை முடிவுகளையும் சேகரித்தனர். வெள்ளெலிகளின் மாதிரிகளும் இதில் பகுப்பாய்வு செய்யப்பட்டன. உயிரணு இழப்பு (Ferroptosis) மூலம் பெரும்பாலான செல்கள் இறக்கின்றன என்று குழு கண்டறிந்தது, இது கோவிட் நோயாளிகளுக்கு நுரையீரல் நோய் ஆதாரத்தை உருவாக்குகிறது.

எனவே, உயிரணு இறப்பின் ஃபெரோப்டோசிஸ் (Ferroptosis) நோயை குறிவைத்து தடுக்கும் மருந்துகள் கோவிட் -19 க்கான சிகிச்சைப் போக்கை மேம்படுத்த உதவும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!

காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…

1 minute ago

காஷ்மீர் தாக்குதல்: “நாங்கள் இல்லை..” – கண்ணீர்விட்டு கதறும் லஷ்கர்-இ-தொய்பா.!

காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…

23 minutes ago

பாக்., தூதரக அலுவலகத்திற்குள் கொண்டு செல்லப்பட்ட கேக்.! மீடியா முன் ஷாக் கொடுத்த நபர்…,

டெல்லி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தை நோக்கி ஒரு நபர்…

2 hours ago

பயங்கரவாதிகள் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மோசமான தண்டனை வழங்கப்படும்! – பிரதமர் மோடி

மதுபானி  : ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் பயங்கரவாதிகள் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளை டார்கெட் செய்து அவர்கள்…

2 hours ago

சத்தீஸ்கர் – தெலுங்கானா எல்லையில் நடந்த மோதலில் 3 நக்சல்கள் சுட்டுக்கொலை!

சத்தீஸ்கர்: பிஜப்பூர் மாவட்டம் கரேகுட்டா வனப்பகுதியில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது நக்சல் தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்கும்…

3 hours ago

ஜம்மு காஷ்மீரில் திக்திக் நொடிகள்…பயங்கரவாத தாக்குதலின் புது வீடியோ!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீர், அனந்த்நாக் மாவட்டம், பஹல்காமில் ஏப்ரல் 22 அன்று, மதியம் 02:50 மணியளவில், 4 முதல்…

3 hours ago