7 ஆண்டுகளுக்கு முன் இறந்த தந்தையை கூகுள் எர்த்தில் பார்த்து அதிர்ச்சியடைந்த மகன்!

Published by
பாலா கலியமூர்த்தி

ஜப்பானை சேர்ந்த ஒருவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது தந்தையின் புகைப்படத்தை கூகிள் எர்த்தில் பார்த்து, அதிர்ச்சியும், ஆச்சிரியமும் அடைந்துள்ளார்.

ஜப்பானை சேர்ந்த ட்விட்டர் பயனாளர் ஒருவர் கொரோனா தொற்று நோய்க்கு மத்தியில் அவர் வீட்டில் இருக்கும் போது, கூகிள் எர்த் என்ற மேப் செயலி மூலம் தனது பெற்றோரின் வீட்டைத் தேட முடிவு செய்துள்ளார். அப்போது, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த என் தந்தையை நான் பார்த்தேன் என்று அவரது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், சாலையின் ஓரத்தில் தனது அம்மா வருகைக்காக, தந்தை காத்திருக்கிறார் என்றும் கூறியுள்ளார்.

எனது தந்தை அமைதியான, கனிவான மனிதர், கூகிள் எர்த் இந்த இடத்திற்கான புகைப்படத்தை புதுப்பிக்காது என்று நம்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது வைரலாகி, 6.9 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. இதை பார்த்து பலரும் கூகிள் எர்த் மேப்பில் தங்களுக்கு சிறந்த இடங்களை தேடி வருகின்றனர். இதுபோன்று, வயல்களில் பணிபுரிந்து கடந்த ஆண்டு இறந்த பாட்டியின் படத்தைக் கண்டுபிடித்ததாக ஒருவர் தெரிவித்துள்ளார். மற்றொரு நபர் இறந்த தனது நாயின் படத்தைக் கண்டுபிடித்தாக கூறியுள்ளார்.

கடந்த 2018-ஆம் ஆண்டு பெரு லிமா நகரில் உள்ள ஒரு பிரபலமான பாலத்தை கடக்க சரியான வழியை அடைய ஒரு நபர் கூகிள் மேப்ஸைப் பயன்படும்போது தனது மனைவியை வேறொரு ஆணுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். அதில், பெஞ்சின் மீது கருப்பு மற்றும் வெள்ளை ஆடை அணிந்த ஒரு பெண்ணும், நீல நிற ஜீன்ஸ் மற்றும் வெள்ளை சட்டை அணிந்த ஒரு ஆணின் புகைப்படம் காட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

9 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

14 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

14 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

15 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

15 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

15 hours ago