நான் மிகவும் உதவியற்றவனாக உணர்கிறேன் என்று நடிகர் சோனு சூட் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை பாலிவுட் நடிகர் சோனு சூட் செய்தார். அதுமட்டுமல் லாமல், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்வது, விவசாயிகளுக்கு காளைகள் வாங்கித் தருவது,வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப விமான டிக்கெட் எடுத்து கொடுத்து பல உதவிகளை செய்தார்.
கொரோனா 2வது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் விழுப்புணர்வுடன் இருக்க அரசு கேட்டு கொண்டு வருகிறது இந்த நிலையில், நடிகர் சோனு சூட் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” எல்லாவற்றையும் சொல்லி முடித்தேன், இன்னும் பல உயிர்களைக் காப்பாற்ற முடியும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். யாரையும் குறை சொல்வதற்கான நேரம் இது இல்லை. உங்களால் முடிந்தது உதவியை தேவைப்படும் ஏழைகளுக்காக முன்வந்து செய்யும் நேரம் இது.
காலையில் இருந்து நான் எனது தொலைபேசியை கீழே வைக்கவில்லை , இந்தியா முழுவதிலும் இருந்து எனக்கு ஆயிரக்கணக்கான அழைப்புகள் வந்து. மருத்துவமனைகளில் படுக்கைகள், மருந்துகள் , ஊசி உள்ளிட்டவை பலருக்கு வழங்க முடியவில்லை, நான் மிகவும் உதவியற்றவனாக உணர்கிறேன். நிலைமை பயமாக இருக்கிறது, தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் , மாஸ்க் அணிந்து, தொற்றுநோயிலிருந்து உங்களைத் தடுக்கவும்.
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக செயல்பட்டு வந்த மணிமேகலை நிகழ்ச்சியில் பிரியங்கா தன்னுடைய வேலையை செய்யவிடாமல் அவருடைய…
ஆந்திர பிரதேசம் : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி பிரசாதமாக அளிக்கப்படும் லட்டு தயாரிக்க, பயன்படுத்தப்படும் நெய்யில், மீன் எண்ணெய்,…
சென்னை -சத்தான பாசிப்பயிறு லட்டு செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பாசிப்பயிறு- ஒரு…