செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்.!

Published by
பால முருகன்

‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்தினை இயக்கிய சுரேஷ் சங்கையா இயக்கத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் ஒருவர் செந்தில் .இவரும் , நடிகர் கவுண்டமணியுடன் இணைந்து நடித்த படங்கள் யாவும் இன்றளவும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.இவர்களின் காம்போக்கு என்றே தனி ரசிகர் பட்டாளம் உண்டு . நடிகர் செந்தில் கடைசியாக சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் எனும் படத்தில் நடித்திருந்தார்.

இதுவரை எந்த படத்திலும் ஹீரோவாக நடிக்காத செந்தில் தற்போது ஹீரோவாக நடிக்க உள்ளார் .நடிகர் செந்தில் முதல் முறையாக ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தினை சுரேஷ் சங்கையா இயக்குகிறார்.இவர் ஒரு கிடாயின் கருணை மனு படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு ஆயுள் தண்டனை குற்றவாளியாக செந்தில் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.இதுவரை பெயரிடப்படாத இந்தப் படத்தினை சமீர் பாரத் ராம் தயாரிக்க ஆர்.வி.சரண் ஒளிப்பதிவு செய்கிறார்.

நடிகர் செந்தில் ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…

2 hours ago

விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…

4 hours ago

LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…

4 hours ago

நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!

டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…

5 hours ago

அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…

6 hours ago

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

6 hours ago