பிரிட்டனில் கொரோனா பரவுதலின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், அதனை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் பல நாடுகள் தீவிரமடைந்துள்ளது. அதில் இந்தியா, ரஷ்யா, அமெரிக்க உட்பட நாடுகள், 3 ஆம் கட்ட பரிசோதனையில் இறங்கியுள்ளனர்.
கொரோனாவால் இதுவரை 3 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 2.2 கோடிக்கும் மேற்பட்டோர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதில் 14 ஆம் இடத்தில் உள்ள பிரிட்டனில், 3.85 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளார்.
இந்தநிலையில், பிரிட்டனில் கொரோனா பரவுதலின் இரண்டாவது அலை தவிர்க்க முடியாதது எனவும், அதற்கான புதிய கட்டுப்படுகள் விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், பிரிட்டனில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தொடங்கியதாகவும், அது தவிர்க்க முடியாததாக உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளுக்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில்…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 3 போட்டிகளில் சேஸிங் செய்வதில் தான் சொதப்பியது என்று பார்த்தால் இன்று…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என கூறப்பட்டு வந்த நிலையில், இபிஎஸ்,…
சென்னை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. சென்னை…
சென்னை : பாஜக மாநிலத் தலைவராக உள்ள அண்ணாமலையை அடுத்து புதிய மாநிலத் தலைவரை தேர்வு செய்யும் தேர்தல் நடைபெற…