‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் இரண்டாம் பாகம்.! கதாநாயகி யார் தெரியுமா ?

Published by
Ragi

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதில் ரக்சிதா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் நாம் இருவர் நமக்கு இருவர் . இந்ந சீரியலில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் செந்தில்குமார். இவர் இதில் அரவிந்த் மற்றும் மாயன் கேரக்டரில் நடிக்கிறார். அதனையடுத்து மாயனின் மனைவியான தேவியாக ரக்ஷா ஹோலா மற்றும் கார்த்திக்கின் மனைவியான தாமரையாக ரஸ்மி ஜெயராஜ் நடித்திருந்தார் . தற்போது ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில் குறைந்த ஆட்களை கொண்டு படப்பிடிப்புகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த சீரியலின் முதல் பாகத்தை நிறுத்தி விட்டு இரண்டாவது சீசனை தொடஙகவுள்ளதாகவும், முதல் பாகத்தில் நடித்த ஹீரோயின்கள் இதில் நடிக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பேசிய ரக்ஷா, நான் பெங்களூரில் இருப்பதால் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள இயலவில்லை என்றும், அந்த சீரியலின் நெருங்கிய நபர் ஒருவர் சில தகவல்களை கூறியதாகவும் தெரிவித்துள்ளார். அதாவது நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலின் சீசன் 2வை எடுக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாகவும், அதில் ஒரு கதாநாயகியாக சரவணன் மீனாட்சி தொடர் ரக்சிதா நடிக்கவுள்ளதாகவும், ஹீரோவாக செந்தில் நடிப்பதாகவும் கூறியுள்ளார். இது ஒரு சில ரசிகர்களுக்கு சற்று வருத்தமான செய்தியாக தான் இருக்கும்.

Published by
Ragi

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

4 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

4 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

6 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

7 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

7 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

8 hours ago