கடந்த வாரம் இன்ஸ்டாகிராமில் ஒருவர் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அந்த வீடியோ ட்ரோன் காட்சிகள் மூலம் ரஷ்யாவில் உள்ள மேற்கு சைபீரியாவின் லியோவிகா அருகே ஒரு ஆரஞ்சு நிறத்தில் இருந்த நிலத்தை காட்டியது.
இதையெடுத்து, பின்னர் நடத்திய விசாரணையில் அது நிலம் அல்ல ஆறு என்பது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள பயன்படுத்தப்படாத செப்பு-சல்பைட் சுரங்கத்தில் உள்ள கழிவுகள் அங்குள்ள குளங்களில் சேமிக்கப்பட்டிருந்தன, ஆனால், ரஷ்யாவில் பெய்து வரும் கனமழை காரணமாக அந்த குளங்களில் இருந்த கழிவுகள் நிரம்பி வழிகின்றன.
இந்த நீர் அங்குள்ள ஆறுகளில் கலந்ததால் தண்ணீர் ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் சுற்றுச்சூழலுக்கு ஏற்பட்ட கடுமையான சேதங்கள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆண்ட்ரி வோலெகோவ் கூறுகையில், (ஈகோபிராவோ என்ற அரசு சாரா நிறுவனத்தில் பணிபுரிகிறார்) கடந்த ஆண்டு இந்த கழிவுநீரை வெளியேற்றுவது குறித்து அதிகாரிகளை எச்சரித்தார் என அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவில் கடந்த மாதம் சைபீரியா மாகாணத்தில் மிகப்பெரிய மின் நிலையத்தில் உள்ள எண்ணெய் சேமிப்பு நிலையத்தில் இருந்து ஏற்பட்ட கசிவு காரணமாக 20,000 டன் எண்ணெய் அருகில் இருந்த அம்பர்ன்யா நதியில் கலந்தது.
இந்த எண்ணெய் கசிவால் 350 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஆற்றை மாசுபடுத்தியது என்பது குறிப்பித்ததக்கது.
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : IQOO போன் என்றாலே கேம் பிரியர்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று சொல்லலாம். விவோ நிறுவனத்துடன் இணைந்து இருக்கும்…
சென்னை : எங்கே பார்த்தாலும் டிராகன் படம் பார்த்தாச்சா? பார்த்தாச்சா என்கிற குரல் தான் கேட்டு கொண்டு இருக்கிறது. அந்த…
லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…
டெல்லி : கும்பமேளா நிகழ்வு என்பது கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய ஆறுகள் ஒன்றாக கூடும் திரிவேணி சங்கமத்தில் 12…