கொரோனா பாதிப்புடன் கூட்டத்தில் கலந்து கொண்ட பாகிஸ்தான் பிரதமர்….!

கொரோன தோற்றால் பாதிக்கப்பட்டு, தனிமையில் இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஊடக குழுவினருடன் நேற்று முன்தினம் அவரது வீட்டில் ஆலோசனை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியுள்ளார்.
பாகிஸ்தான் பிரதமரின் இம்ரான் கானுக்கு, கடந்த 20-ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு தொற்று உறுதி செய்யப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்புதான் தடுப்பூசி போடப்பட்டிருந்தது. இவரைத் தொடர்ந்து, இவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இருவரும் வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில், கொரோன தோற்றால் பாதிக்கப்பட்டு, தனிமையில் இருக்கும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ஊடக குழுவினருடன் நேற்று முன்தினம் அவரது வீட்டில் ஆலோசனை கூட்டத்தை தலைமை ஏற்று நடத்தியுள்ளார். இந்த கூட்டத்தில் இம்ரான்கான் ஒரு இருக்கையிலும், அவருக்கு அருகே ஊடக குழுவினர் வேறு இரு இருக்கைகளிலும் அமர்ந்திருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியானது.
இதனையடுத்து, பாகிஸ்தான் பிரதமரின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பாகிஸ்தானை பொறுத்தவரையில் கொரோனா வைரஸ் பாதித்த ஒருவர் 9 முதல் 14 நாட்களுக்கு தனிமையில் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025