தளபதி விஜய் அடுத்ததாக நடிக்கும் படத்தின் டைட்டில் குறித்த போஸ்டர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய் தற்போது மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் .விரைவில் இந்த படம் திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான “தளபதி-65” படத்தை முதலில் முருகதாஸ் இயக்க உள்ளதாக கூறப்பட்டது .
ஆனால் அவர் ஒரு சில காரணங்களால் அப்படத்திலிருந்து விலக,தளபதி65 படத்தை இயக்குவதாக பல இயக்குனர்களின் பெயர்கள் அடிப்பட்டது .அதில் எஸ்ஜே சூர்யா ,மகிழ் திருமேனி, பேரரசு உள்ளிட்ட பலரின் பெயர்கள் அடிப்பட்டது.அதிலும் இயக்குனர் நெல்சன் அவர்கள் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவதாக கூறப்பட்டிருந்தது.இயக்குநர் நெல்சன் இயக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் தளபதி விஜய்யின் 65-வது படத்தில் ஹீரோயினாக தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாகவும் , வில்லனாக பாலிவுட் நடிகரான ஜான் ஆபிரகாம் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தது. இந்நிலையில் தற்போது தளபதி 65 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது தளபதி விஜய்யின் அடுத்த படத்தின் டைட்டில் குறித்த போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
“டார்கெட் ராஜா” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில் நெல்சன் இயக்குவதாகவும், அனிருத் அவர்கள் இசையமைக்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது .ஆனால் இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . தளபதி 65 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு டிசம்பர் 31-ம் தேதி படக்குழுவினர் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இசையமைப்பாளராக அனிருத் பணியாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஏற்கனவே தளபதி விஜய்யின் கத்தி மற்றும் மாஸ்டர் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படியென்றால் ரசிகர்களுக்கு டபிள் விருந்து தான் .
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…