பிலிப்பைன்ஸின் மணிலா விமான நிலையத்தில் இருந்து ஜப்பானின் ஹனெடாவுக்கு பதிவு எண் RP-C5880 ஐக் கொண்ட ஒரு ஜெட் விமானம் இன்று இரவு 8 மணியளவில் மருத்துவ சிகிக்சைக்காக ஒரு நோயாளியை அழைத்து செல்ல இருந்தது.
இந்த விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டு இருந்த போது தீப்பிடித்து வெடித்தது. இதையெடுத்து தீயணைப்புப் படையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விமானத்தில் மூன்று மருத்துவர்கள் மற்றும் ஒரு நோயாளி உட்பட எட்டு பேர் கொண்ட குழுவினர் இருந்தனர். விமானத்தில் இருந்த நோயாளி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாரா..? என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை.
மணிலா சர்வதேச விமான நிலைய ஆணையம் சார்பில் வெளியான தகவல் படி எந்த பயணிகளும் தப்பவில்லை என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.பிலிப்பைன்ஸில் இதுவரை கொரோனாவால் 1,418 பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோயால் இதுவரை 71 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜெட் விமானம் பிலிப்பைன்ஸ் தீவுகளைச் சுற்றி மருத்துவப் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.மேலும் இந்த வார தொடக்கத்தில் பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறையின் முகநூல் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது.அதில் சுகாதார அதிகாரிகள் விமானத்தில் மருத்துவ பொருட்களை ஏற்றுவதைக் காட்டியது.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…