பிலிப்பைன்ஸின் மணிலா விமான நிலையத்தில் இருந்து ஜப்பானின் ஹனெடாவுக்கு பதிவு எண் RP-C5880 ஐக் கொண்ட ஒரு ஜெட் விமானம் இன்று இரவு 8 மணியளவில் மருத்துவ சிகிக்சைக்காக ஒரு நோயாளியை அழைத்து செல்ல இருந்தது.
இந்த விமானம் ஓடுபாதையில் சென்று கொண்டு இருந்த போது தீப்பிடித்து வெடித்தது. இதையெடுத்து தீயணைப்புப் படையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த விமானத்தில் மூன்று மருத்துவர்கள் மற்றும் ஒரு நோயாளி உட்பட எட்டு பேர் கொண்ட குழுவினர் இருந்தனர். விமானத்தில் இருந்த நோயாளி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டாரா..? என்பது குறித்த தகவலும் வெளியாகவில்லை.
மணிலா சர்வதேச விமான நிலைய ஆணையம் சார்பில் வெளியான தகவல் படி எந்த பயணிகளும் தப்பவில்லை என கூறியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.பிலிப்பைன்ஸில் இதுவரை கொரோனாவால் 1,418 பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நோயால் இதுவரை 71 பேர் இறந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஜெட் விமானம் பிலிப்பைன்ஸ் தீவுகளைச் சுற்றி மருத்துவப் பொருட்களை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.மேலும் இந்த வார தொடக்கத்தில் பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறையின் முகநூல் பக்கத்தில் ஒரு புகைப்படம் வெளியிடப்பட்டது.அதில் சுகாதார அதிகாரிகள் விமானத்தில் மருத்துவ பொருட்களை ஏற்றுவதைக் காட்டியது.
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த வருடம் ஜூன் மாதம் ஸ்டார்…
சென்னை : பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த…
டெல்லி : அண்மையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை கைப்பற்றிய கொண்டாட்டத்தில் இந்திய அணி வீரர்கள் இருக்கும்…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…
சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…