நடுவானில் காணாமல் போன விமானம் …!கடலில் விழுந்து நொறுங்கியது..!200 பேர் பலி ?
இந்தோனேஷியா விமானம் ஓன்று புறப்பட்ட 13 நிமிடங்களில் கடலில் விழுந்து நொறுங்கியுள்ளது.
லையன் ஏர் விமானம் இந்தோனேஷியாவில் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது.தினமும் காலை இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில் இருந்து பங்க்கால் பினாங் தீவுக்கு இயக்கப்படுகிறது.அதேபோல் இன்றும்,சரியாக காலை 6.20 மணிக்கு ஜே.டி.610 விமானம் ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்டது.இந்த விமானம் போயிங் 737 மேக்ஸ்8 வகையைச் சேர்ந்தது.அதேபோல் பங்க்கால் பினாங் தீவுக்கு சரியாக 7.20 மணிக்கு சென்றடையும் .ஆனால் விமானம் சென்ற 13 நிமிடங்களில் கட்டுப்பாடு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.
இதனால் விமானத்திற்கு என்ன ஆனது என்று தெரியாமல் இருந்து வந்தது.இந்நிலையியல் காணாமல்போன லயன் ஏர் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதேபோல் விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 200 பேர் பயணித்ததாக கூறப்படுகிறது.