தரையிறங்கும் போது விழுந்து விபத்துக்குள்ளான விமானம்.. 2 பேரின் உடல் மீட்பு!

Default Image

பாகிஸ்தானில் 90 பயணிகளுடன் கராச்சி நோக்கி சென்ற விமானம் விபத்துக்குளானது. அந்த விபத்தில் 2 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புத்துறையினர் தெரிவித்தனர்.

பாகிஸ்தான், லாகூரிலிருந்து 90 பயணிகளுடன் கராச்சியை நோக்கி ஏர்பஸ் A-320 ரக விமானம் புறப்பட்டது. அது கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும் பொது, விமான நிலையத்திற்கு அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இதனால் அந்த குடியிருப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு விரைந்த மீட்புத்துறையினர், மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தினார்கள். அந்த விமான இடிபாடுகளில் இருந்து 2 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்பு துறையினர் தெரிவித்தனர். மேலும், விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்துவருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்