கொரோனாவால் வேலையிழந்த விமானியின் நூடில்ஸ் கடை.
கடந்த 8 மாத காலமாக உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனாவால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இயல்புநிலை திரும்பி வந்தாலும், இந்த ஊரடங்கால், வேலையிழந்த மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக தான் உள்ளது.
ஆனால், வேலையிழந்த பலர் மற்ற வேலைகளை தேடி செல்கின்றனர். அந்த வகையில், மலேசியாவில் கொரோனா அச்சுறுத்தலால் வேலையிழந்து விமானி ஒருவர் நூடுல்ஸ் கடை ஒன்று தொடங்கி உள்ளார்.
மலிண்டோ ஏர் விமான நிறுவனத்தில் பணிபுரிந்த 2 ஆயிரம் ஊழியர்களை அந்நிறுவனம் பணியிலிருந்து நீக்கியது. இந்த 2 ஆயிரம் பேரில், விமானி அஸ்ரின் மொஹமட் சவாவியும் ஒருவர். இவருக்கு 4 குழந்தைகள் உள்ள நிலையில், விமானி அஸ்ரின் மொஹமட் சவாவி, மனம் தளராமல், தலைநகர் கோலாலம்பூரில் சிறிய நூடில்ஸ் கடை ஒன்றை தொடங்கியுள்ளார்.
இந்த கடையில் அவர் வியாபாரம் செய்யும் பொது, விமான கேப்டனின் உடை அணிந்திருப்பதால், இவரது உடை பலரின் கவனத்தை ஈர்த்தது. மேலும், இவரது கடையில் தயாராகும் உணவுகள் சுவையுடன் காணப்படுவதால் மக்கள் மத்தியில் இக்கடை பிரபலமடைந்துள்ளது.
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…
சென்னை : விடாமுயற்சி படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.…
நாக்பூர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை வென்ற இந்தியா அதே தெம்புடன் இன்று…