வில்லியம்சன் என்ற 34 வயதான ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் 5 லிட்டர் தண்ணீர் குடித்ததால், உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.
உலகம் முழுவதும் கொரானா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இங்கிலாந்தில், தற்போது புதிய வகை கொரானா வைரஸ் தீவிரமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த வைரஸை கட்டுப்படுத்த உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கி உள்ள நிலையில், இங்கிலாந்தில் வில்லியம்சன் என்ற 34 வயதான ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவரிடம் சென்றுள்ளார்.
இதனையடுத்து, அவர் ஒவ்வொரு நாளும் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்குமாறு பரிந்துரைக்கப்பட்டார். வில்லியம்சன் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட தினமும் 5 லிட்டர் தண்ணீர் குடித்துள்ளார். இதனால் அவரது சோடியம் அளவு ஆபத்தான அளவில் குறைந்துள்ளது. இதனை அடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது. அவரது மனைவி லாரா ஆம்புலன்ஸ்க்கு அழைப்புவிடுத்தார் அதன்பின் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் 20 நிமிடங்களுக்கு மேலாக மூச்சுப் பயிற்சி எதுவும் இல்லாமல் இருந்துள்ளார்.
இதனை அடுத்து, இரண்டு முதல் மூன்று நாட்கள் வென்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. ஒரு வார காலமாக அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்த நிலையில், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இதனையடுத்து மருத்துவ ஊழியர்கள் அவருக்கு சில சோதனைகளை மேற்கொண்டு, அவரது உடலில் எலக்ட்ரோலைட்களை சரி செய்தனர். பின் அவர் தனது மனைவியுடன் மருத்துவமனையில் இருந்து விடைபெற்று வீட்டிற்கு சென்றுள்ளார்.
சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த 'மெய்யழகன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, திரை விமர்சகர்கள்…
லார்ட்ஸ் : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இடையே 4-வது ஒருநாள் போட்டி லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை- சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைக்கான [செப்டம்பர் 28] எபிசோடில்ல ஒரே அடியில் கீழே விழுந்தார் பாடிகார்ட்.. ஒரே அடியில்…
சென்னை : ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தில் ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன உற்பத்தி…
லார்ட்ஸ் : ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் விளையாடிய 4-வது ஒருநாள் போட்டியானது நேற்று லண்டனில் உள்ள லார்ட்ஸில் நடைபெற்றது.…
சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியானது வரும் அக்டோபர் 6-ஆம் தேதி முதல் தொடங்கி ஒளிபரப்பாகவுள்ளது.…