பொறுப்பான பணிகளை செய்யக்கூடிய நடிகர் யாஷ் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும், அவரது புதிய படமான கேஜிஎப் 2 படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் எனவும் கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே வெற்றிபெற்ற கேஜிஎப் படத்தின் தொடர்ந்து கேஜிஎப் 2 படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க கூடிய நடிகர் யாஷ் புகைபிடிப்பது போன்ற டீசர் ஒன்று அண்மையில் வெளியாகியது. அதில் யாஷ் எந்திர துப்பாக்கியில் சிகரெட் பற்றவைத்துப் புகை பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த டீசர் அதிக பார்வையாளர்களை பெற்று தென்னிந்திய சினிமாவின் முதல் இடத்தையும் பிடித்து இருந்தது. இந்நிலையில் இந்த டீஸருக்கு கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், பொறுப்பான பணிகளைச் செய்யக்கூடிய நடிகர் யாஷ் மீது தனக்கு மரியாதை உள்ளதாகவும், அவரது புதிய படம் ஆகிய கேஜிஎப் 2 படத்தில் அவர் சிகரெட் பிடிக்கக் கூடிய காட்சிகள் வெளியாகி இருக்கிறது. இந்த காட்சிகளை நீக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் நடிகர்களை ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பின்பற்றுவது போல அவரது ரசிகர்களும் அவரை பின் தொடர்வார்கள். இதுபோன்ற காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும், புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்குவது சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் விஷயமாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். அரசின் இந்த கருத்து அனைத்து படங்களுக்கும் பொருந்தும் எனவும் கூறியுள்ளார்.
குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…
துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…
சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…
சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…
சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…
நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…