மக்களோடு மக்களாய் வலம் வந்த பென்குயின்! ஆச்சர்யத்தில் உறைந்த போலீசார்!

Default Image

மக்களோடு மக்களாய் வலம் வந்த பென்குயின்.

இங்கிலாந்து நாட்டில், நாட்டிங்காம் என்ற பகுதியில், போலீசார் நேற்று வழக்கம்போல் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சாலையில் மனிதர்கள் வருவார்கள் என்று நினைத்த போலீசாருக்கு காத்திருந்தது ஒரு ஆச்சரியம். அது என்னவென்றால் பெண் குயின் ஒன்று தத்தி தத்தி அழகாக நடந்து வருவதைக் கண்டனர்.

ஆச்சர்யத்தில் ஆழ்ந்த காவல்துறையினர் பின்பு சுதாரித்துக் கொண்டு பெண்குயின் இடம் மனிதர்களிடம் விசாரிப்பது போல விசாரிக்கத் தொடங்கினர். ‘எப்படி வந்தாய்’ என்று  கேட்க அது திகைத்து திகைத்து பார்க்கவே அதற்கு ‘போப்போ’ என்று செல்லப் பெயர் சூட்டியுள்ளனர்.

மேலும் இந்த பெண்குயின் போலீசாருடன் நட்பாக பழகியதோடு, அவர்களுடன் சேர்ந்து புகைப்படங்களும் விதவிதமாக எடுத்துள்ளது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘விரைவில் பெண் குயினை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க உள்ளதாகவும், பென்குயின்  காட்டில் இருந்து வந்திருந்தால் அதனை காட்டில் விட்டிருக்கலாம். ஆனால் இது அடுத்தவர் வளர்ப்பு என்பதால் அதனை நாங்கள் காட்டில் விட முடியாது.’ என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்