கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 95 லட்சமாக அதிகரிப்பு!

Default Image

இதுவரை 95லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் தொடரிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

கொரானா வைரஸ் தாக்கம் அதிகரித்துக் கொண்டே சென்றாலும் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வது போல நாளுக்கு நாள் குணமாகுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டேதான் செல்கிறது. இந்நிலையில், இதுவரை உலகம் முழுவதும் 15,654,649 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இவர்களில் 636,479 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், 9,535,641 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.

உயிரிழந்தவர்களை விட குணமாகி வீடு திரும்பியவர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம் என்றே கூறலாம். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதும் 276,000 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக நேற்று ஒரே நாளில் 6,309 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலை மாற வேண்டுமானால் நாம் தொடர்ந்து வீட்டிலேயே தனித்திருப்போம், விழித்திருப்போம் கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்து போராடுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்