பிரபல மலையாள நடிகை மற்றும் தனுஷின் மரியான் பட நடிகையான பார்வதி மேனன் இயக்குநராக களமிறங்குகிறார் என்று சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலையாள சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பார்வதி மேனன் . இவர் தமிழ், கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் சில படங்களில் நடித்துள்ளார். தமிழில் தனுஷின் மரியான், கமலின் உத்தமவில்லன், பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து வரவேற்பைப் பெற்றார். சமீபத்தில் இவர் நடிப்பதிலிருந்து சிறிய இடைவெளியை எடுத்து டைரக்ஷன் கற்றுக் கொள்வதற்காக வெளிநாடு சென்றிருப்பதாக சில தகவல்கள் வெளியாகியிருந்தது. தற்போது இவர் இயக்குநராக களமிறங்குவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஊரடங்கு நேரத்தில் இரண்டு திரைக்கதைகளை உருவாக்கி தயாராக வைத்திருப்பதாகவும், அதில் ஒன்று அரசியல் பின்னணி நிறைந்த கதை என்றும் , மற்றொன்று சைக்காலஜிக்கல் திரில்லர் கலந்த கதையம்சத்தை கொண்டது என்றும், ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்புகள் தொடங்கப்படும் என்றும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் பார்வதி மேனன் கூறியுள்ளார். மேலும் இவை இரண்டையும் தனது திரையுலக நண்பர் ஒருவருடன் இணைந்து இயக்க போவதாகவும், அதற்கான தயாரிப்பு திட்டங்களை தொடங்கி விட்டதாகவும் கூறியுள்ளார். விரைவில் இதற்கான கூடுதல் விவரங்கள் வெளிவரும் என்று கருதப்படுகிறது.
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோததின. இந்தப் போட்டி…
கொல்கத்தா : சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் (இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும்) தொடங்கி நடைபெற்று வருகிறது. …
கடலூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தனது கடலூருக்கு சென்றுள்ளார். அங்கு பல்வேறு முடிவுற்ற மக்கள் நலத்திட்டங்கள் மற்றும் …
சென்னை : இன்று திரைக்கு வந்துள்ள, தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’, பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் மூன்றாவது போட்டியில், ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி…
சென்னை : 'எந்திரன்' திரைப்படத்தின் காப்புரிமை தொடர்பாக இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது திரைத்துறையில்…