டெஸ்லா நிறுவனம்,டெக்சாஸில் உள்ள அதன் இரண்டாவது அமெரிக்க கார் தொழிற்சாலையான ‘ஜிகாஃபாக்டரிக்கு’ 2022ம் ஆண்டிற்குள் 10,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளது.
டெஸ்லா நிறுவனத்தின் ஆட்சேர்ப்பு அதிகாரிகளில் ஒருவரான கிறிஸ் ரெய்லி, “டெக்சாஸ் ஜிகாஃபாக்டரியில் உற்பத்தி, டிசைன், கட்டிடக்கலை, கட்டுமானம் உள்ளிட்ட பதவிகளுக்கான இடங்கள் உள்ளன.ஆகையால் யார் வேண்டுமானாலும் வேலை செய்ய வாய்ப்புகள் உள்ளன.எனவே வெளியில் இருந்து வரும் தனிநபர்கள் இந்த வேலையில் ஆர்வம் கொண்டவர்களாகவும், வித்தியாசமான ஒன்றை உருவாக்க விரும்புகிறார்களாகவும் இருக்க வேண்டும்.மேலும் உயர்நிலைப் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள்கூட இதற்கு விண்ணப்பிக்கலாம். இதனால் வேலை செய்து கொண்டு உங்கள் கல்வியைத் தொடரமுடியும்.”,என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து எலோன் மஸ்க், “டெக்சாஸில் உள்ள ஜிகாஃபாக்டரிக்கு 2022க்குள் 10,000 க்கும் மேற்பட்டோர் தேவைப்படுகிறார்கள், ஃபாக்டரிக்கு செல்ல விமான நிலையத்திலிருந்து 5 நிமிடங்கள், நகர்புறத்திலிருந்து 15 நிமிடங்கள் மட்டுமே ஆகும். எனவே உங்கள் போக்குவரத்திற்கான நேரம் குறையும்.ஆகையால் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கல்லூரி முடித்திருக்க வேண்டிய அவசியமில்லை. உயர்நிலைப் பள்ளியை முடித்த நபர்களுக்கு இங்கு எப்போதும் வேலை உண்டு”என்று கூறி மக்களை விண்ணப்பிக்க ஊக்குவித்துள்ளார்.
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…