அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு வந்த புதிய சிக்கல்..??

Default Image

அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக வருகின்ற மே 10 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளதாக தகவல்.

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இந்த மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதி பாபு, போன்ற பல நடிகர்கள், நடிகைகள் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹைதராபாத்தில் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் நயன்தாராவும், ரஜினியும் கலந்து கொண்டனர். விறுவிறுப்பாக 1 வாரம் நடைபெற்று வந்த நிலையில், படப்பிடிப்பின் போது 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இதனை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்திற்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் அவர்க்கு கொரோனா இல்லை என்று தெரியவந்தது, ஆனால் ரஜினிக்கு இரத்த அழுத்தம் சீராக இல்லாத காரணத்தால் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

அதற்கு பிறகு மீண்டும் இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு சில காட்சி மட்டும் ஹைதராபாத்தில் வைத்து படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அங்கு இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்