பிரபல நடிகையின் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபர்.!

Published by
Ragi

நடிகை கங்கனா ரணாவத் வீட்டில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் மற்றும் ஹிந்தி சினிமாவில் நடித்து பிரபலமானவர் கங்கனா ரணாவத். இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனையடுத்து ஹிந்தி பக்கம் சென்று முன்னணி நடிகையாக வலம் வருகிறார். இவர் தற்போது தமிழில் ஏ. எல். விஜய் இயக்கத்தில் ‘தலைவி’ என்ற ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இவர் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறி வருகிறார். ஆம் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு பாலிவுட் தான் காரணம் என்றும், அதனுடன் நெப்டோடிஸம் குறித்தும், இயக்குநர் கரண் ஜோஹர் உள்ளிட்ட பலரை விமர்சனம் செய்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் இவர் மகாராஷ்டிர முதல்வர் மற்றும் அவரது மகனை விமர்சித்து பேசியுள்ளார். இந்த நிலையில் மணாலியில் வசித்து வரும் அவரது வீட்டில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் நேற்றிரவு 11.30 மணிக்கு சுட்டதாக புகார் அளித்துள்ளார். முதல்வர் மற்றும் மகனை குறித்து பேசியதால் அவர்கள் பயமுறுத்துவதாகவும், இதற்கெல்லாம் பயரமாட்டேன் என்றும், தொடர்ந்து எனது கருத்துக்களை தெரிவிப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும் நான் வீட்டில் தூக்குபோட்டு இறந்தால் கூட அது தற்கொலை இல்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள் என்றும் கூறியுள்ளார்.

Recent Posts

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

INDvsPAK: கடைசி நேரத்தில் அடுத்தடுத்து சரிந்த பாக்., வீரர்கள்.! பந்து வீச்சில் மிரட்டிய இந்தியா…

துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…

12 hours ago

மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!

ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…

13 hours ago

NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…

துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…

14 hours ago

வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!

சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…

14 hours ago

INDvsPAK: நீயா? நானா? வெற்றி வாகை யாருக்கு! டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங்.!!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…

17 hours ago

IND vs PAK: பாகிஸ்தான் அணிக்கே வெற்றி!! “கோலி என்னதான் முயற்சி செஞ்சாலும் இந்தியா வெற்றி பெறாது” – கணித்த IIT பாபா!

உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…

17 hours ago