44 நாடுகளில் இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளது…! – WHO

Published by
லீனா

44 நாடுகளில் இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளது என WHO தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது.இந்த உருமாறிய கொரோனா வைரஸ், இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் பரவலாக காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ், உலக அளவில் 44 நாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், இதுவரை 4500 மாதிரிகள் கண்டறியப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை தவிர்த்து இந்தியாவில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரஸ்  பிரிட்டனில் தான் அதிகமாக காணப்படுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் பரவிவரும் வகை உருமாறிய கொரோனா வைரஸ், வேகமாக பரவும் தன்மை கொண்டது. இந்த வைரஸ் பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில்  அதிகமாக காணப்படும் நிலையில், இந்த வைரஸ் ஆனது முதலில் பரவிய வைரஸ்களை விட அதிகமான ஆபத்து நிறைந்ததாகவும், வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் அதிக உயிரிழப்பை ஏற்படுத்துவதாகவும் இருக்கிறது எனவே தான் இது உலக நாடுகளுக்கு வேகமாக பரவுகிறது.

இந்த வைரஸ் குறித்த முதல்கட்ட ஆய்வில், உருமாற்றம் அடைந்த இந்த கொரோனா வைரஸ் அதிக ஆற்றல் உள்ளதாகவும், தடுப்பூசிகளை செயலிழக்க செய்து, எதிர்க்கும் தன்மை கொண்டதாகவும், உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளால் குறைந்த அளவுதான் உருமாறியகொரோனா வைரஸ்களில் இருந்து பாதுகாப்பு அளிக்க முடியும் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் இந்த வைரஸ் பரவுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், அரசு மதரீதியான நிகழ்வுகளை அனுமதித்தது, அரசியல் ரீதியான கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள் மூலம் மக்கள் கூடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தியது,கொரோனா தடுப்பு  நடைமுறைகளான சமூக விலகல், முக கவசம் அணிதல் போன்றவற்றை மக்கள் தவிர்த்தது இதுதான் இந்த வைரஸ் வருவதற்கு முக்கிய காரணம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் பிரிட்டனில் பரவியுள்ள மிகப்பெரிய ஆபத்தையும், தீவிரமான பரவலையும் ஏற்படுத்தக்கூடிய வைரஸ் இந்தியாவில் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

“மக்கள் தொகை மேலாண்மையில் இருந்து தொகுதி மறுசீரமைப்பு வேறுபட்டது” – சந்திரபாபு நாயுடு சூசகம்.!

டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…

9 minutes ago

INDvsNZ : 25 ஆண்டுகால பழைய கணக்கை பழி தீர்க்குமா இந்தியா?

துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…

1 hour ago

மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…

3 hours ago

ரோஹித் சர்மா பேட்டிங் சரியில்லை…”உடனே இதை பண்ணுங்க”..சுனில் கவாஸ்கர் அட்வைஸ்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…

4 hours ago

வீங்கிய வயிற்றுடன் உயிருக்கு போராடும் நடிகர் அபினய்! கல்லீரல் நோயால் அவதி…

சென்னை : தனுஷின் 'துள்ளுவதோ இளமை', தாஸ், என்றென்றும் புன்னகை போன்ற பல படங்களிலும், பல முன்னணி விளம்பரங்களிலும் நடித்துள்ள…

4 hours ago

காலையில் சரிவு.. மதியம் ஏற்றம் .. 2வது முறையாக தங்கம் விலையில் மாற்றம்!

சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…

4 hours ago