திரையுலகை ஆண்டது போதும், தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே ” என்ற வாசகங்களுடன் கூடிய போஸ்ட்ரை சூர்யா ரசிகர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் வழக்கமாக போஸ்ட்ர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்துவது வழக்கம். சமீபத்தில் கூட மதுரையில் தளபதி ரசிகர்கள் விஜய் மற்றும் சங்கீதாவின் திருமண நாளை முன்னிட்டு எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவை போன்று சித்தரித்தும், மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், திரையரங்குகள் திறப்பது குறித்தும் போஸ்ட்ர்கள் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். அதே போன்று அஜித் ரசிகர்களும் தியேட்டரில் வலிமை படம் திரையிடப்படும் வரை வேறு எந்த படத்தையும் பார்க்க மாட்டோம் என்று கூறி போஸ்ட்ர்களை ஒட்டினர்.
இந்த நிலையில் தற்போது சூர்யா ரசிகர்களும் சூர்யாவை அரசியலில் களமிறங்க கோரி போஸ்ட்ர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் சூர்யாவை சேகுவாரா போல சித்தரித்து தமிழக சட்டமன்றத்தின் படத்தையும் இடம்பெற செய்து ‘திரையுலகை ஆண்டது போதும், தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே’ என்ற வாசகங்களுடன் போஸ்ட்ர் ஒட்டப்பட்டுள்ளது. தற்போது இந்த போஸ்ட்ர் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…