மருமகள் கர்ப்பமாக இருப்பதை பகிர்ந்து கொள்ளும் நேரத்தில் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறிய மாமியார்!

Published by
Rebekal

தான் கர்ப்பமாக இருக்கிறேன் என்பதை தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்ள இருந்த பெண்ணிற்கு அவரது மாமியார் அவரும் கர்ப்பமாக இருப்பதாக இவர்கள் அறிவிப்பதற்கு முன்பதாகவே அறிவித்தது சோகத்தை ஏற்படுத்தியது என பெண் ஒருவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

பெண்மணி ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது வாழ்வில் நடந்த ஒரு மோசமான நிகழ்வு என்று கூறி பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் கொரோனா காலகட்டமாக இருந்ததால் கடந்த வருடம் தனது திருமணம் மிக எளிமையான முறையில் வீட்டில் உள்ளவர்களுக்கு தெரியும்படி மட்டுமே நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். அதன் பின்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி சற்று உறவினர்களுக்கு கூறி சில நாட்களுக்குப்பின்பதாக நடத்தப்பட்டதால் அப்போது அந்தப் பெண்மணி கர்ப்பமாக இருந்துள்ளார். எனவே திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வைத்து தான் கர்ப்பமாக இருப்பதை அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும் என அந்தப் பெண்மணி விரும்பியுள்ளார்.

உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடி இருக்கும் பொழுது அனைவருக்கும் சாப்பாடு பகிரப்பட்டு கொண்டு இருந்துள்ளது. அப்பொழுது அந்தப் பெண்மணியின் கணவரின் தாயார் அதாவது அப்பெண்மணியின் மாமியார் பேசுவதற்காக மைக்கை எடுத்துள்ளார். அனைவரும் சாப்பிடும் பொழுது தனது மாமியார் தங்களைப் பற்றி பெருமையாக சொல்ல போகிறார் என அந்தப் பெண்மணி நினைத்துள்ளனர். அனைவரும் சாப்பிடும் பொழுதும் பேசுவது நன்றாக இருக்கும் எனவும் நினைத்துள்ளார்.

ஆனால் அந்தப் பெண்மணியின் மாமியார் இவர்கள் புதுமண தம்பதிகள் பற்றி பேசாமல் தான் கர்ப்பமாக இருப்பதாக அனைவர் முன்னிலையிலும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அந்த பெண்மணி கூறுகையில் தங்களைப் பற்றி பெருமையாகக் கூறுவார் என நினைத்து தான் பேசட்டும் என அனுமதி அளித்தோம். ஆனால் இப்படி ஒன்றை செய்வார் என நினைத்து பார்க்கவில்லை. அந்த நாளில் அனைவரது கவனமும் என் பக்கம் இருக்க வேண்டும் என நினைத்தேன். ஏற்கனவே எளிமையாக நடைபெற்ற திருமண வரவேற்பு அவர்களுக்கு சாதகமாக அமைந்து எனக்கு மோசமான நாளாக மாறிவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்! 

RCB vs RR : சொந்த மைதானத்தில் பெங்களூருவின் முதல் வெற்றி! போராடி தோற்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

5 hours ago

இனி இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் கிடையாது! பிசிசிஐ அதிரடி முடிவு!

டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

6 hours ago

RCB vs RR : விராட் கோலி அதிரடி ஆட்டம்! ராஜஸ்தான் வெற்றிக்கு 206 ரன்கள் இலக்கு!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

7 hours ago

RCB vs RR : சொந்தமண்ணில் வெற்றிபெறுமா பெங்களுரு? டாஸ் வென்ற ராஜஸ்தான்!

பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…

9 hours ago

இது போர் தான்.., இந்தியா – பாகிஸ்தானின் அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள்…

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…

10 hours ago

பாகிஸ்தான் ராணுவ பிடியில் இந்திய ராணுவ வீரர்! துப்பாக்கி, வாக்கி டாக்கி பறிமுதல்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…

11 hours ago