உலகிலேயே மிக விலை உயர்ந்த 11 கோடி மதிப்பிலான வைரக்கல் பதித்த இஸ்ரேலில் உருவாக்கப்பட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதிலும் பரவி வரக் கூடிய சூழ்நிலையில் அடிப்படை பாதுகாப்பு உபகரணமாக மக்கள் பயன் படுத்துவது மாஸ்க் தான். இதை சிலர் தங்களது வசதிக்கேற்ப ஐந்து ரூபாயிலிருந்து 5 லட்சம் வரையில் வாங்கி உபயோகப் படுத்திக் கொண்டுதான் உள்ளனர். இந் நிலையில் அண்மையில் கூட தங்கத்தில் மாஸ்க் செய்த ஒரு தங்க வியாபாரி குறித்த செய்திகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வந்தது. தற்போது சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த அமெரிக்காவில் வசிக்கக்கூடிய கோடீஸ்வரர் ஒருவர் உலகிலேயே மிக அதிக விலையிலான மாஸ்க் அணிய வேண்டும் என்ற எண்ணத்தில் இஸ்ரேலில் வைர மாஸ்க்குக்கு ஆர்டர் கொடுத்துள்ளார்.
இந்த மாஸ்க் 18 கேரட் தங்கத்தால் தயாரிக்கப்பட்டு, 3600 வெள்ளை மற்றும் கருப்பு வைரங்கள் பதிக்கப்பட்ட N 99 பில்டர் அமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மாஸ்க்கை ஓர்னா அண்ட் இசாக் லெவி எனும் நகைக்கடை காரர் செய்து வருகிறார். டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் செய்து கொடுக்க வேண்டும் என்று ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து நகை கடைக்காரர் கூறும் போது, பணம் எல்லாத்தையும் கொடுத்து விடாது. இது போன்று வித்தியாசமாக மாஸ்க் அணிந்து மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பது இவர்களின் எண்ணம். அவர்களுக்கு இது மகிழ்ச்சியை கொடுக்கிறது என பதிவிட்டுள்ளார்.
சென்னை : அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ள நிலையில்,…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதற்கு எதிராக தமிழ்நாடு அரசு…
டெல்லி : வாக்காளர் பட்டியல் மற்றும் போலி வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக காங்கிரஸ் உட்பட முழு எதிர்க்கட்சியும்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது சகா புட்ச் வில்மோர்…
ஃபுளோரிடா : இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் 9…
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…