நடிகர் சசிகுமார் நடித்து வரும் பகைவனுக்கு அருள்வாய் படத்தின் ஷிமோகா செட்டியூல் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனரும் ,நடிகருமான சசிகுமார் தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.அதில் ஒன்று “பகைவனுக்கு அருள்வாய்” .’திருமணம் என்னும் நிக்கா’ படத்தை இயக்கிய அனிஸ் அப்பாஸ் இயக்கும் இந்தப் படத்தில் வாணிபோஜன் ஹீரோயினாக நடிக்கிறார்.அவருடன் பிந்து மாதவியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மேலும் நாசர், சதீஷ், நிஷ்நஷம், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் கிளாசிக் புத்தகமான மாக்பெத்தை தழுவி உருவாக்கப்பட உள்ள இந்த படத்தினை 4 மங்கி ஸ்டுடியோ தயாரிக்கிறது.மேலும் ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது.ஷிமோகாவில் நடைபெற்று வந்த பகைவனுக்கு அருள்வாய் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பகைவனுக்கு அருள்வாய் என்ற பெயருடன் படக்குழுவினர் டீ ஷர்ட் ஒன்று அணிந்து கொண்டு எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை…
கராச்சி : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் குரூப் பி-யில் இங்கிலாந்து,…