திங்கள் கிழமையன்று அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் புறநகர் பகுதியில் இருக்கும் மின்கம்பத்தில் ஒரு சிறிய கரடி ஏறியுள்ளது. கம்பத்தில் ஏறிய அந்த கரடி மின்கம்பிகளில் சிக்கியுள்ளது. இதனை பற்றி தெற்கு அரிசோனாவில் உள்ள வில்காக்ஸ் நகரத்தில் அமைந்துள்ள சல்பர் ஸ்பிரிங்ஸ் வேலி எலக்ட்ரிக் கூட்டுறவு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பின்னர், இந்த கரடியை மீட்கும் முயற்சியில் அந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளதாக ஏபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலில் அந்த கரடிக்கு மின்சாரம் தாக்காமல் இருப்பதற்காக மின்சாரத்தை துண்டித்தனர். அதன் பின்னர் கரடியை கீழே வர வைப்பதற்காக கண்ணாடியிழை குச்சியால் தட்டியுள்ளனர். ஆனால் அந்த கரடி குச்சிகளை பிடித்துள்ளது. பிறகு, அதுவே கீழே இறங்கி வந்துள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், கரடி மின்கம்பத்தில் இருக்கும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
காஷ்மீர் : பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை அடுத்து, தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. ஸ்ரீநகரில் நேற்று (சனிக்கிழமை) 60க்கும்…
கேரளா : சமீபத்தில் ஹிட்டான 'ஆலப்புழா ஜிம்கானா', 'தள்ளுமாலா' படங்களின் இயக்குநர் காலித் ரகுமான் உள்பட மூவர் போதைப்பொருள் வழக்கில்…
திருபுவனை : புதுச்சேரி மாநிலம் திருபுவனையில் புரட்சியாளர் அம்பேத்கர் திருஉருவச் சிலையை நேற்று திறந்துவைத்தார். இவ்விழாவில் மே 17 இயக்கத்தின்…
கோவை : கோவையில் நடைபெற்று வரும் தவெக கருத்தரங்கில் பங்கேற்க அக்கட்சியின் தலைவர் விஜய் வந்தபோது, விமான நிலையத்திற்குள் தடுப்புகள்,…
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…