ஈரான் – ஆப்கானிஸ்தான் இடையே முதல் ரயில் சேவை தொடக்கம்

Default Image

ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டுத் தலைவர்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் சரக்கு ரயில் இணைப்பை திறந்து வைத்தனர்.இதுஇரு நாட்டின் வர்த்தக தொடர்புகளை மேம்படுத்தும் என்ற நம்பிக்கை யை வெளிப்படுத்தியுள்ளது. 

கிழக்கு ஈரானில் இருந்து மேற்கு ஆப்கானிஸ்தான் வரை 140 கிலோமீட்டர் தூரம் வரை இந்த பாதை அமைக்கப்பட்டுள்ளது.2007-ஆம் ஆண்டு 75 மில்லியன் டாலர் செலவில் இந்த தொடங்கப்பட்டது.ஆப்கானிஸ்தானின் வளர்ச்சியில் ,ஒரு பகுதியாக எல்லையின் இருபுறமும் கட்டுமானத்திற்கு ஈரான் நிதியளித்தது.

இது தொடர்பான மாநாட்டில் பேசிய ஈரானின் ஜனாதிபதி ஹசன் ரூஹானி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் “வரலாற்று நாட்களில் ஒன்று” இது வாகும் என்று கூறினார்.  ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் கனி கூறுகையில் ,ரயில் பாதை “ஈரானில் இருந்து விலைமதிப்பற்ற பரிசு” என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்