பொன்னியின் செல்வன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்.!

Default Image

பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய போர் காட்சிக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இன்றுடன் முடிவடைகிறது.

பிரமாண்ட பட்ஜெட்டில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம் பிரபு, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், அர்ஜுன் சிதம்பரம், பிரபு, போன்ற பல பிரபலங்கள் இந்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள்.

விறுவிறுப்பாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு 70% விகிதம் முடிவைத்துள்ள நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக மீண்டும் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மீண்டும் படப்பிடிப்பு நடத்த அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து மீண்டும் கடந்த மாதம் படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய போர் காட்சிக்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் பிரமாண்ட செட் அமைத்து நடைபெற்று வந்த நிலையில்,  இன்றுடன் முடிவடைகிறது. இதையடுத்து படக்குழுவினர் முக்கிய காட்சிகளை படமாக்க மத்திய பிரதேசம் செல்கின்றனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்