கோப்ரா திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை கொல்கத்தாவில் படத்தின் நடைபெறவுள்ளது.
நடிகர் விக்ரம் தற்போது நடித்து வரும் திரைப்படங்கள் பொன்னியின் செல்வன், சியான் 60, கோப்ரா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கோப்ரா திரைப்படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்குகிறார். இந்த படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்து வந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அடுத்ததாக மீண்டும் படப்பிடிப்பு நடந்த அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால், விக்ரம் பொன்னியின் செல்வன், சியான் 60 ஆகிய திரைப்படங்களில் நடிக்க சென்றுவிட்டார். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு விக்ரம் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் வாழ் பயிற்சி செய்யும் வீடியோ வெளியானது. அடுத்ததாக நேற்று சியான் 60 படகுழுவுடன் இருந்தார்.
இதனால் கோப்ரா படக்குழு விக்ரம் இல்லாத காட்சியை படமாக்கினர். இந்த நிலையில், தற்போது மீண்டும் நடிகர் விக்ரம் கோப்ரா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நாளை கலந்துகொள்ளவுள்ளார். கொல்கத்தாவில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நாளை நடைபெறவுள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…