கடைசியாக தாயாருக்கு சித்ரா ஹேமந்த் எனது கணவர் , எந்த நேரத்திலும் என் கணவரை விடமாட்டேன் என்ற குறுஞ்செய்தியை அனுப்பியுள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை சித்ரா நேற்றைய தினம் தங்கியிருந்த ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.அவரது கன்னத்தில் ரத்த காயம் இருந்ததை தொடர்ந்து போலீசார் சித்ராவின் மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.தூக்கில் தொங்கினால் கழுத்தில் காயம் ஏற்படலாம் ,எப்படி கன்னத்தில் ஏற்பட்டிருக்க கூடும் என்று பல கேள்விகள் எழுந்தது.
அதனை தொடர்ந்து முதலாவதாக அவருடன் தங்கியிருந்த கணவரான ஹேமந்துடன் விசாரணை மேற்கொண்ட போது இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாக கூறயிருந்ததாக கூறப்பட்டது .மேலும் அவர் குளிக்க செல்வதாக கூறி ஹேமந்தை வெளியே அனுப்பியதாகவும் கூறப்பட்டது .வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் ஹோட்டல் ஊழியரான கணேசனின் உதவியுடன் மாற்று சாவி உபயோகித்து கதவை திறந்து பார்த்த போது பட்டு புடவையில் தூக்கில் தொங்கியப்படி சித்ராவை கண்டதாகவும் , அதனையடுத்து ஊழியரின் உதவியுடன் ஹேமந்த் சித்ராவை கீழே இறக்கி படுக்க வைத்த பின்னரே காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தாக கூறப்படுகிறது.இதில் சித்ரா கணவரை எதற்கு அறையிலிருந்து குளிக்க செல்வதாக கூறி வெளியேற்ற வேண்டும் என்று கேள்விகள் எழுந்து சந்தேகம் போலீசார் மத்தியில் அதிகரித்துள்ளது.
மேலும் சித்ராவின் கடைசி வீடியோவில் அவர் போன் பேசி கொண்டிருந்ததை தொடர்ந்து அவரது போனை சைபர் கிரைம் கைப்பற்றியதாகவும் ,அதில் அவர் கடைசியாக தனது தாயாரிடம் தான் பேசியதாகவும் கூறப்படுகிறது . சித்ராவின் தாயார் சித்ராவிடம் திருமணம் ஆகாமல் ஹேமந்துடன் ஒன்றாக தங்குவது குறித்து வாக்குவாதம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.கடந்த ஒரு மாதமாகவே சித்ராவின் திருமணத்திற்கு குடும்பத்தினர் தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்புக் கிளம்பியதாக கூறப்படுகிறது .இந்த நிலையில் நடிகை சித்ரா கடைசியாக தனது தாயாருக்கு வாட்ஸ்அப்பில் குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.அதில் ஹேமந்த் எனது கணவர் , எந்த நேரத்திலும் என் கணவரை விடமாட்டேன் என்று சித்ரா குறிப்பிட்டுள்ளார் .
சென்னை : நேற்று முன்தினம் ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, நேற்று காலை…
சென்னை : இன்றும், நாளையும் அதிமுக மாவட்டப் பொறுப்பாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.…
வாஷிங்டன் : உலகின் மிகப் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராகவும், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ், மற்றும் எக்ஸ் சமூக வலைதளத்தின் தலைமை…
சென்னை : அரசு சேவைகளை எளிதாக்கும் 'எளிமை ஆளுமை' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டம்,…
சண்டிகர் : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 பிளேஆஃப்களுக்கான களம் தயாராக உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு…
சென்னை : தமிழகத்தில் 2 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை பெய்வதற்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நீலகிரி,…