பாகிஸ்தானில் நேற்று நடந்த விமான விபத்தில் 99 பேர் உயிரிழந்த நிலையில், அந்த விபத்து தொடர்பான விமானி பேசிய கடைசி திக் திக் ஆடியோ ஒன்று வெளியானது.
பாகிஸ்தான், லாகூரிலிருந்து கராச்சியை நோக்கி பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான PK-8303 விமானம் புறப்பட்டது. அந்த விமானம், கராச்சி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் தரையிறங்க வேண்டிய அந்த விமானம், திடீரென விமான நிலையத்திற்கு அருகிலிருந்த குடியிருப்பு பகுதிக்குள் விழுந்தது.
இதுவரை 91 பயணிகள், 8 ஊழியர்கள் என மொத்தம் 99 பேர் அந்த கோர விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர். 2 பேர் அந்த விபத்தில் இருந்து காயங்களுடன் தப்பினர். அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உலகையே உலுக்கிய இந்த விபத்து தொடர்பான ஒரு வீடியோ, அங்குள்ள வீடுகளில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவானது. அந்த வீடியோவில், பறந்து வந்து கொண்டிருந்த விமானம், குடியிருப்பு பகுதியில் உள்ள கட்டடங்களுக்கு இடையே விழுந்தது.
அந்த விமானம், ஓடுபாதைக்கு அருகில் வந்தபோது திடீரென என்ஜினில் ஏற்பட்ட பழுது காரணமாக விமானம் ஓடுபாதையில் தரையிறங்கமுடியாமல் அங்குள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்தது. இதனால் அங்குள்ள வீடுகள், வாகனங்கழும் தீயில் எரிந்தது.
அதில் பயணித்த இரண்டு பேர் மட்டும் அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர்தப்பிய நிலையில், அதில் ஒருவர் கூறுகையில், திடீரென விமானம் கிலே விழுந்ததாகவும், குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டதாகவும், அவரை சுற்றி தீ எரிந்து வருவதாகவும் கூறினார்.
அந்த விமானத்தில் இயக்கிய விமானிக்கும் விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியருக்கும் இடையிலான கடைசி உரையாடலின் அவர் “விமானத்தில் ஒரு என்ஜினை இழந்துள்ளோம்” என்று அவர் கூறுகிறார். அதற்க்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியர், உங்களுக்காக இரண்டு ஓடுபாதைகளில் ஏதேனும் தரையிறங்குமாறு அவரிடம் சொன்ன விமானக் கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியர், நாங்கள் உங்களுக்கு உதவி செய்கிறோம். என கூறினார்.
மேலும் சிறிது நேரத்தில் விமானத்திற்கும், விமானக் கட்டுப்பாட்டு அறைக்கும் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அந்த சமயமே, விமானம் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.
அலகாபாத் : சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில், தை அமாவாசையை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 5- போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஏற்கனவே, இந்திய கிரிக்கெட் அணி வெற்றிபெற்றுவிட்ட நிலையில்,…
டெல்லி : விவோ நிறுவனம் அடுத்ததாக தங்களுடைய வி சிரிஸில் 50வ-வது மாடலை அறிமுகம் செய்யவிருக்கிறது. ஏற்கனவே, பிப்ரவரி 2025 இல்…
டெல்லி : மத்திய பட்ஜெட் 2025-க்கான கூட்டத்தொடர் நாடாளுமன்றத்தில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
மதுரை : திருப்பரங்குன்றம் மலையில் முருகன் கோயில், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது போல, மற்றோரு புறம் சிக்கந்தர் பாதுஷா தர்கா…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் இளம் வீரரான அபிஷேக் சர்மா அதிரடியான ஆட்டங்களை வெளிப்படுத்தி வருகிறார்.…