பீட்டர் பவுல் மனைவியான வனிதாவின் நெற்றியில் முத்தமிடும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
கடந்த சனிக்கிழமை வனிதா விஜயகுமார் பீட்டர் பவுல் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்ட புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகியது. நெருங்கிய நண்பர்கள் மற்றும் தனது குழந்தைகளின் முன்னிலையில் திருமணம் நடைப்பெற்றது.
அந்த தருணத்தில் வனிதா மற்றும் பீட்டர் பவுல் ஒருவருக்கொருவர் லிப்லாக் செய்த புகைப்படத்தை நெட்டிசன்கள் பலர் விளாசி வந்தனர். மகளின் முன்னிலையில் இவ்வாறு செய்வது தவறு என்றும், இது போன்ற புகைப்படங்களை மகள்களின் வாழ்க்கையை கருதி வெளியிடாதீர்கள் என்றும் தெரிவித்தனர்.
சமீபத்தில் கூட பீட்டர் பவுலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் தன்னை விவகாரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாகவும், அவரை குடிகாரர் என்றும், பல பெண்களுடன் தொடர்பு உள்ளதாகவும் குற்றஞ்சாட்டி வந்தார். அதற்கு தனது யூடியூப் சேனல் மூலம் பதிலடியும் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது பீட்டர் பவுல் வனிதாவின் நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு, அதனுடன் மகள்களை பெற்ற அப்பாகளுக்கு தான் தெரியும், முத்தம் காமத்தில் சேர்ந்தது அல்ல என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு பலர் ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்து வருகின்றனர்.
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…
மகாராஷ்டிரா : இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டியானது…
சென்னை : சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பது பல்வேறு அரசியல் த்தலைவர்களின் கோரிக்கையாக உள்ளது. காங்கிரஸ் எம்பியும் எதிர்க்கட்சி…
மகாராஷ்டிரா : இந்தியா மற்றும் இங்கிலாந்து இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல் போட்டி…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் முதல்கட்டமாக 104 இந்தியர்கள், அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டதாக வெளியாகியுள்ள…
நாக்பூர் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒரு…