ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன், தீபாவளிக்கு முன்னதாக மட்டுமே விற்பனைக்கு வரும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
கூகுள் மற்றும் ரிலையன்ஸ் கூட்டணியில் உருவான ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட்போன் செப்டம்பர் 10 விநாயகர் சதுர்த்தியான இன்று விற்பனைக்கு வரும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,ஜியோ நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன், தீபாவளிக்கு முன்னதாக மட்டுமே விற்பனைக்கு வரும் என ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் செமிகண்டக்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் திட்டமிட்டபடி அதன் தயாரிப்பு முழுமை அடையவில்லை என்பதனால்,விற்பனை தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, ஜியோ தனது அறிவிப்பில் கூறியிருப்பதாவது: “இந்த கூடுதல் நேரம் தற்போதைய தொழில்துறை அளவிலான, உலகளாவிய பற்றாக்குறையை தணிக்க உதவும். ஜியோபோன் நெக்ஸ்ட் என்பது 2ஜி வசதி கொண்ட தொலைபேசிகளை பயன்படுத்தும் மக்களை அதிவேக இணையத்துடனான சாதனத்தை பயன்படுத்த வைப்பதே ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விலை சுமார் 3 ஆயிரத்து 500 ரூபாயாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும்,விலை குறைவான Qualcomm QM214 பிளாட்பார்மில் தயாராகும் இந்த போனில்,13 எம்பி சிங்கிள் லென்ஸ் பின்புற கேமரா மற்றும் செல்பிக்காக 8 எம்பி கேமரா இருக்கும் என கூறப்படுகிறது.
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர்…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து மற்றும் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் மோதிக்கொள்ளும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட கிரிக்கெட்…
சென்னை : வழக்கமாக அஜித் படங்கள் என்றாலே அவருக்கென தனி மாஸான ஓப்பனிங் பாடல் இருக்கும். மாஸ் வசனங்களுடன் அவருடைய அறிமுக…
மகாராஷ்டிரா : இந்தியா – இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் முதல்…
அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும்…
டெல்லி : யூனிவர்சிட்டி கிராண்ட்ஸ் கமிஷன் (UGC) சமீபத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதற்கான தேடுதல் குழுவின் அமைப்பில் மாற்றங்களை அறிவித்திருந்தது. அறிவிக்கப்பட்ட…