கொரோனாவுக்கு எதிரான போரில் துணிச்சலுடன் களமிறங்கிய இந்திய வம்சாவளி மருத்துவர்கள்.!

Published by
மணிகண்டன்

உலக வல்லரசு நாடாக அறியப்பட்ட அமெரிக்காதான் தற்போது கொரோனாவிலும் முன்னணியில் இருக்கிறது. அங்கு பணியாற்றும் மருத்துவ ஊழியர்களில் இந்தியர்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. இது குறித்து இந்திய வம்சாவளி அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரேஷ் ரெட்டி பேட்டியளித்தார். அதில் இந்திய மருத்துவர்களின் கொரோனா தடுப்பு பங்களிப்பு, அமெரிக்காவின் மருத்துவ நிலை என பலவற்றை பற்றி கூறியுள்ளார்.

அந்த பெட்டியிலிருந்து டாக்டர் சுரேஷ் ரெட்டி கூறிய சில கருத்துக்கள் இதோ, ‘ இதுவரை பொருளாதாரத்தில் முதல் இடம் என கூறிவந்த அமெரிக்கா, தற்போது கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று பலி எண்ணிக்கையில்,  கொரோனா பரிசோதனை செய்த எண்ணிக்க்கையில் உலக அளவில் முதலிடம் வகித்து வருகிறது. இதுதான் தற்போதைய அமெரிக்க நிலை.

அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவர்களில் ஒவ்வொரு 7 மருத்துவர்களில் ஒருவர் இந்தியர்தான். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னடியில் துணிச்சலுடன் செயல்பட்டு வருவது இந்திய வம்சாவளி மருத்துவர்கள்தான். இந்திய மருத்துவ சமூகத்தை அமெரிக்க அரசு அதிகாரிகள் பாராட்டுகிறார்கள்.

கொரோனாவை கட்டுப்படுத்துவது ஓரிரு மாதங்களில் முடிந்து விடுகிற போர் கிடையாது. 1 முதல் 2 ஆண்டுகள் வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது.

ஊரடங்கு நடவடிக்கைகளால் மக்கள் கவலைப்படுகிறார்கள், மக்களுக்கு சோர்வு ஏற்படுகிறது. ஊரடங்கினை சரியான திட்டமிடல் இல்லாமல் தளர்த்தினால் கொரோனா வைரஸ் மீண்டும் வந்துவிடும்.  அப்போது பாதிப்புகள் இன்னும் அதிகமாகியிருக்கும். கொரோனாவை கட்டுப்படுத்துவது மக்களின் கைகளில்தான் உள்ளது.
மருத்துவ சாதனங்கள், மருந்துப்பொருட்களை வாங்குவதற்கு சீனாவை சார்ந்திருக்காமல் தானே உற்பத்தி செய்ய தொடங்க வேண்டும் என அமெரிக்கா தற்போது பாடத்தை கற்றுள்ளது என பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார்.
Published by
மணிகண்டன்

Recent Posts

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

“தமிழ் ஐசியூ-ல இருக்கு .. உங்கள கெஞ்சி கேக்குறேன்” செல்வராகனின் உருக்கமான வீடியோ.!

சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…

6 hours ago

குழந்தைகள் ஆபாச பட விவகாரம்.! உயர்நீதிமன்றத்திற்கு ‘குட்டு’ வைத்த உச்சநீதிமன்றம்.!

டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…

6 hours ago

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போட காரணம் என்ன தெரியுமா?.

சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…

6 hours ago

ஐபிஎல் 2025 : இந்த 5 வீரர்களை தக்க வைத்த சிஎஸ்கே! வெளியான தகவல்!

சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…

6 hours ago

ஆணாதிக்கத்தை சமூக நையாண்டியுடன் பேசும் ‘லாப்பத்தா லேடீஸ்’.!

சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…

7 hours ago

மக்களே! தமிழகத்தில் (24.09.2024) செவ்வாய்க்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

7 hours ago