கொரோனாவுக்கு எதிரான போரில் துணிச்சலுடன் களமிறங்கிய இந்திய வம்சாவளி மருத்துவர்கள்.!

உலக வல்லரசு நாடாக அறியப்பட்ட அமெரிக்காதான் தற்போது கொரோனாவிலும் முன்னணியில் இருக்கிறது. அங்கு பணியாற்றும் மருத்துவ ஊழியர்களில் இந்தியர்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. இது குறித்து இந்திய வம்சாவளி அமெரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் சுரேஷ் ரெட்டி பேட்டியளித்தார். அதில் இந்திய மருத்துவர்களின் கொரோனா தடுப்பு பங்களிப்பு, அமெரிக்காவின் மருத்துவ நிலை என பலவற்றை பற்றி கூறியுள்ளார்.
அந்த பெட்டியிலிருந்து டாக்டர் சுரேஷ் ரெட்டி கூறிய சில கருத்துக்கள் இதோ, ‘ இதுவரை பொருளாதாரத்தில் முதல் இடம் என கூறிவந்த அமெரிக்கா, தற்போது கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கையில், கொரோனா வைரஸ் தொற்று பலி எண்ணிக்கையில், கொரோனா பரிசோதனை செய்த எண்ணிக்க்கையில் உலக அளவில் முதலிடம் வகித்து வருகிறது. இதுதான் தற்போதைய அமெரிக்க நிலை.
அமெரிக்காவில் பணிபுரியும் மருத்துவர்களில் ஒவ்வொரு 7 மருத்துவர்களில் ஒருவர் இந்தியர்தான். கொரோனா வைரசுக்கு எதிரான போரில் முன்னடியில் துணிச்சலுடன் செயல்பட்டு வருவது இந்திய வம்சாவளி மருத்துவர்கள்தான். இந்திய மருத்துவ சமூகத்தை அமெரிக்க அரசு அதிகாரிகள் பாராட்டுகிறார்கள்.
கொரோனாவை கட்டுப்படுத்துவது ஓரிரு மாதங்களில் முடிந்து விடுகிற போர் கிடையாது. 1 முதல் 2 ஆண்டுகள் வரை நீடிக்கும் வாய்ப்புள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025